சிற்பம்
வாயிற்காவலர்
வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | இறவாதீஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
கருவறை விமானத்தின் கோட்டத் தெய்வங்களுக்கு காவலராய் அமைக்கப்பட்டுள்ள வாயிற்காவலர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஊன்றிய கதையின் (தண்டம்) மேல் இடது கையை தாங்கியாக வைத்து (திரிபங்கநிலை) உடலை மூன்று கோணங்களில் திருப்பிய நிலையில் உள்ளார். கேசபந்தம் தலையில் அணி செய்திட தலையின் இருபுறமும் குழல் கற்றைகள் விரிந்துள்ளன. காதுகளில் பனையோலைச் சுருள்கள் எழில் சேர்க்கின்றன. வயிற்றில் உதரபந்தம், இடையில் கச்சை, மார்பில் முப்புரிநூல் ஆகியன காட்டப்பட்டுள்ளன. இடது காலை நன்கு ஊன்றி வலது காலை ஸ்வஸ்திக வடிவில் தூக்கியுள்ளார். வலது கையை மார்பின் குறுக்கே கொண்டு சென்று மேலே உயர்த்தியுள்ளார். காவலர் வலது கையில் தாங்கியுள்ளது என்னவென்று அறியக்கூடவில்லை.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வாயிற்காவலர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |