சிற்பம்

வாயிற்காவலர்கள்
சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | துக்காஜி ஆபத்சகாயேசுவரர் கோயில் |
ஊர் | துக்காஜி |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | ஆபத்சகாயேசுவரர் கோயில் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-12-ஆம் நூற்றாண்டு / சோழர் |
விளக்கம்
கருவறையின் இடப்புற வாயிற்காவலர் இடது கையை வியப்பு முத்திரையில் வைத்துள்ளார். வலது கையை கதை மீது வைத்து நிற்கின்றார். இருவரின் உடல்வாகு திரிபங்க நிலையில் உள்ளது. ஆடையணிகள் வேறுபட்டுள்ளன. மற்றொரு கருவறையின் வாயிற்காவலர்களில் வலப்புற வாயிற்காவலர் வலது கையை வியப்பு முத்திரையிலும், இடப்புற காவலர் வலது கையை வியப்பு முத்திரையிலும் வைத்துள்ளனர். அன்னாரின் ஆடையணிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இக்கோயில் கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |