சிற்பம்

வாயிற்காவலர்கள்
சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
ஊர் | செந்தலை |
வட்டம் | திருக்காட்டுப்பள்ளி |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
விளக்கம்
a:1:{i:0;s:3190:"தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அந்நாளில் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட செந்தலை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். இறைவனின் இடதுபுற வாயிற்காவலர் இடது காலை ஊன்றி, வலது காலை சுவஸ்திகத்தில் விரல்களால் ஊன்றியுள்ளார். வலது கை தண்டத்தில் இருத்தி, இடது கை வியப்பு முத்திரை காட்டுகிறார். தோள்களின் இருபுறமும் சடைக்கற்றை குழல்கள் பரந்துள்ளன. சடைபாரம் தாங்கிய இவருக்கு முகம் சற்று சிதைந்துள்ளது. கடைவாயின் இருபுறமும் வெளி நீட்டியுள்ள கோரைப் பற்களுடன் உருட்டி விழியராய், புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கிறார். மகர குண்டலம் அணிந்துள்ள இவரின் மார்பில் பஞ்சவடி புரிநூலாய் துலங்குகிறது. வலதுபுறம் நிற்பவர் முதலாமவரின் நிற்கும் கோலத்தை எதிர் மாற்றியுள்ளார். இடது முழங்கையை ஊன்றியுள்ள தண்டத்தில் வைத்து சுட்டு முத்திரை காட்டுகிறார். வலது கை இடையில் கடி முத்திரை காட்டுகிறது. நாகத்தினை குண்டலமாக அணிந்துள்ளார் போலும். மார்பில் பஞ்சவடி காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் சரப்பளி, கைகளில் கங்கணம், கேயூரம் காட்சியளிக்கின்றன. முதலாமவரை போல் அமைதி தவழும் முகம். நெற்றிப்பட்டை விளங்க, முகப்புடன் கூடிய புரிசடை மகுடம், அரையாடை, கால்களில் சதங்கை அணிந்தவராய் நிற்கிறார்.";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வாயிற்காவலர்களின் சிற்பங்கள் சோழர்காலத்தில் தனித்துவம் வாய்ந்தவையாகவும், பெரிய அளவினவாகவும் கலை நயத்துடன் அமைக்கப்படுதல் மரபு. அவ்வாறே செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் வாயிற்காவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |