Back
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின் பெயர் கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின்அமைவிடம் இறவாதீஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
உமையஞ்ச ஆனையுரித்த தேவர் யானையின் உடலை உரித்து நிற்கும் வதைக்காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சம்ஹார மூர்த்தங்களுள் ஒன்றான இறைவனின் அட்ட வீரட்ட செயல்களில் ஒன்றான ஆனையை உரித்து வதைக்கும் காட்சி உமையாள் அஞ்சிக் கொண்டு காணுவதாக வடிக்கப்பட்டுள்ளது. ஆனையை உரிக்கும் இறைவனின் வலிமையை உணர்த்தும் சிற்பமாகவும், உமை வியந்து, அஞ்சிட நிற்பதாகவும் இச்சிற்பம் வடிக்கப்படுவது இயல்பு. இடது காலை நிலத்தில் ஊன்றி, வலது காலை யானையின் தலைமேல் வைத்தவாறு (ஊர்த்துவஜானு) ஆறு திருக்கைகளுடன் ஆனையுரித்த பிரான் விளங்குகிறார். கைகளில் முன்வளை, கடகவளை காட்டப்பட்டுள்ளது. ஜடாபந்தம் தலையணியாகக் கொண்டு, அரையாடை அணிந்து, இடையாடை முன் விழ, தனது இடது முன் கையால் யானையின் தந்தத்தை ஒடித்து பிடித்துள்ளார். மேலிரு கைகள் யானையின் தோலை உரித்தவாறு இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. அதிவீரச் செயலை காணும் தேவி அருகில் மிரண்டு ஓடும் நிலையில் உள்ளாள். இரு கைகளில் இடது கை கடி முத்திரையாக இடையில் வைத்தவாறு உள்ளது. வலது கையில் இன்னதென்று அறியக்கூடவில்லை.
குறிப்புதவிகள்
கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்