சிற்பம்

வாயிற்காவலர்கள்
சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தளவானூர் குடைவரைக் கோயில் |
ஊர் | தளவானூர் |
வட்டம் | செஞ்சி |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | குடைவரையின் முகப்பு வாயில் |
சிற்பத்தின் வகை | குடைவரை-புடைப்புச் சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் |
விளக்கம்
தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர் மலையில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. இக்குடைவரைக் கோயில் ‘சத்ருமல்லேஸ்வரம்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. கருவறையில் இலிங்கம் காணப்படுகின்றது. கருவறையின் இடப்புற வாயிற்காவலர் ஒரு கையை வியப்பு முத்திரையில் வைத்துள்ளார். கையை தலைக்குச் சரியாக உயர்த்தி நிற்கின்றார். வலப்புற காவலரோ கதை மீது கைவைத்து நிற்கின்றார். இருவரின் உடல்வாகு திரிபங்க நிலையில் உள்ளது. ஆடையணிகள் வேறுபட்டுள்ளன. மற்றொரு கருவறையின் வாயிற்காவலர்களில் வலப்புற வாயிற்காவலர் இடது கையை வியப்பு முத்திரையிலும், இடப்புற காவலர் வலது கையை வியப்பு முத்திரையிலும் வைத்துள்ளனர். இவ்விருவரும் தத்தம் மற்றொரு கையை ஊரு முத்திரையில் வைத்துள்ளனர். அன்னாரின் ஆடையணிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தூண்கள் மீது திருவாசி எனப்படும் ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.சுகவனமுருகன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் கிராமப்புறச் சாலையில் 6கி.மீ. பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். தளவானூர் குடைவரைக் கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் (கிபி 600 - 630) குடைவிக்கப்பட்டது. தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 18 |
பிடித்தவை | 0 |