சிற்பம்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின் பெயர் | சண்டேச அனுக்கிரக மூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | இறவாதீஸ்வரர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
மணலால் செய்து வழிபட்ட இலிங்கத்தை காலால் எட்டி உதைத்த தன் தந்தையின் காலைத் துண்டித்த சண்டேசர்க்கு கொன்றை மாலை சூடும் பெருமான்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நின்ற நிலையில் உள்ள பெருமானுக்கு இரண்டு கைகளே காட்டப்பட்டுள்ளன. இறைவனின் தலையலங்காரம் ஜடாபந்தம் போன்று ஜடாபாரத்தின் மேல் கொண்டைக் காட்டப்பட்டுள்ளது. இறையனாரின் முப்புரிநூல் இடது தோள் வழியே செல்கிறது. இடையாடை முடிச்சு முழங்காலுக்குக் கீழே செல்கிறது. அரையாடை அணிந்த பெருமானாரின் முகமும் வலது கையும் சிதைந்துள்ளது. இடது கையால் தன் காலருகே பணிவுடன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சண்டேசரின் தலையில் கொன்றை மாலையைச் சூடுகிறார். சண்டேசருக்குப் பின்னால் நின்ற நிலையில் தேவி இக்காட்சியை காண்கிறார். தேவி ஸ்வஸ்திக வடிவில் கால்களை இருத்தி நிற்கிறார். இறைவனின் இடது புறம் மேலே இக்காட்சியைக் காணும் வானவர் ஒருவர் வாழ்த்துகிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |