சிற்பம்

உமாமகேசுவரர்

உமாமகேசுவரர்
சிற்பத்தின் பெயர் உமாமகேசுவரர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
இறைவனும் இறைவியுமாய் அமர்ந்திருக்கும் கோலம் உமாமகேசுவரர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இச்சிற்பம் புனரமைக்கப்பட்ட சிற்பம். இறைவனுக்கு இரண்டு கைகளே உள்ளன. வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாமகுடம் தரித்துள்ளார். ஆடையணிகள் புனரமைக்கப்பட்டவை. உமையின் அமர்வு எழில் மிகுந்தது. உடலை இறைவன் அமர்ந்திருக்கும் பக்கம் திருப்பியும், முகம் நேராகவும் காட்டப்பட்டுள்ளது. வலதுகாலை மடக்கி குத்துக்காலிட்டு, இடது காலை தொங்கவிட்டு இடது கையை ஊன்றிய நிலையிலும் , வலது கை மலர்ப்பிடி முத்திரையாகவும் கொண்டு விளங்கும் தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். அன்னையின் இடையாடையின் முடிச்சு அவர் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழே தொங்குகின்றது. அணிகலன்கள் ஏதும் அறியக்கூடவில்லை.
குறிப்புதவிகள்
உமாமகேசுவரர்
சிற்பம்

உமாமகேசுவரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்