சிற்பம்
உமாமகேசுவரர்
உமாமகேசுவரர்
சிற்பத்தின் பெயர் | உமாமகேசுவரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
ஊர் | கொடும்பாளுர் |
வட்டம் | விராலிமலை |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
விளக்கம்
சிவபெருமான் உமையுடன் அமர்ந்திருக்கும் காட்சி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பீடத்தின் மீது சிவபெருமானும் உமையும் அமர்ந்துள்ளனர். மகேசுவரர் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். சிவனாருக்கு தலைப்பகுதியும், கையும் சிதைந்துள்ளது. அருகில் உமை இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டு உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையை ஊன்றியுள்ளார். இடது கை மடங்கிய கையாக இடது முழங்காலின் மீது வைக்கப்பட்டுள்ளது. அன்னை கரண்ட மகுடம் அணிந்துள்ளார். கழுத்தில் ஆரம் தெரிகிறது. பிறவணிகள் அறியக்கூடவில்லை. சிவனாருக்கு மார்பில் பட்டையான முப்புரி நூலும், வயிற்றில் உதரபந்தமும் காட்டப்பட்டுள்ளன. வலது கை சிதைந்துள்ளது. இடது கை அன்னையின் தோளை அணைத்தவாறு உள்ளதாக தோன்றுகிறது. சிவபெருமானுக்கு இரண்டு கைகளே காட்டப்பட்டிருக்கின்றன. இச்சிற்பம் ஆலிங்கன மூர்த்தியாக இருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
உமாமகேசுவரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |