சிற்பம்
பூதகணங்கள்
பூதகணங்கள்
சிற்பத்தின் பெயர் | பூதகணங்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
பூதவரியில் அமைந்துள்ள பூதகணங்களின் அங்க சேட்டைகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகை கணப்பிரிவுகளில் மேற்கூடிய உடலமைப்புக்களை பெற்றவர்கள் பூத கணங்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் சிவபெருமானுக்கு படையாக, காவலர்களாக, தொண்டர்களாக தொன்மங்களிலும், புராணங்களிலும், சிற்பங்களிலும் காட்டப்படுகின்றனர். ஒரு சாய்த்து படுத்திருக்கும் இரு கணங்களின் மேலே ஏறி இரு கணங்கள் அமர்ந்துள்ளன. கீழே படுத்திருக்கும் கணங்கள் ஆண், பெண் இணையாய் இருக்கலாம். அவற்றின் முகத்தில் வெட்கப் புன்னகை தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பூதகணங்கள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |