சிற்பம்
கங்காவிசர்ஜன மூர்த்தி
கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பத்தின் பெயர் | கங்காவிசர்ஜன மூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
ஊர் | கொடும்பாளுர் |
வட்டம் | விராலிமலை |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
விளக்கம்
கங்கைப் பெண்ணை சிவபெருமான் தலையில் தாங்கியதால் அவருடன் ஊடலுற்று திரும்பிய நிலையில் உமையும், செய்வதறியாது நிற்கும் சிவனும்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பத்தில் சிவனுக்கு இரண்டு கைகளே காட்டப்பட்டுள்ளன. வலது கையில் மழுவைப் பிடித்துள்ளார். இடது தொங்கவிடப்பட்டுள்ளது. சடை மகுடம் தரித்துள்ளார். காதுகளில் பத்ரகுண்டலமும், வியாழ குண்டலமும் விளங்குகின்றன. தேவி தாடங்கம் என்னும் தோடுகள் அணிந்துள்ளாள். கழுத்தில் முத்தாலான அல்லது மணிகளால் ஆன ஆபரணத்தை இருவரும் அணிந்துள்ளனர். இருவருக்கும் கைகளில் தோள்வளை, முன் வளைகள் அமைந்துள்ளன. கங்காதரருக்கு வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. அவை வெவ்வேறு கலைப்பாணியில் காட்டப்பட்டுள்ளன. ஈசனாருக்கு அரைப்பட்டிகை இடையில் அமைந்த அரையாடையும், அம்மைக்கு கணுக்கால் வரை நீண்ட ஆடையும் இடை முடிச்சுகளுடன் அமைந்துள்ளன. உமை இடது கையை இடையில் ஊன்றி மடக்கியவாறும், வலது கையை வயிற்றுக்கு குறுக்காக வைத்தவாறும் உள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் சற்று பக்கவாட்டில் திரும்பி நின்றுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கங்காவிசர்ஜன மூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |