சிற்பம்

ஆலிங்கனமூர்த்தி

ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின் பெயர் ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கொடும்பாளுர் மூவர் கோயில்
ஊர் கொடும்பாளுர்
வட்டம் விராலிமலை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி
விளக்கம்
உமையன்னையின் இடையை இடது கையால் அணைத்தபடி அமர்ந்துள்ள சிவனார் ஆலிங்கன பெருமான்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இறைவன் இறைவியின் இடையில் கை வைத்து அணைத்து தன் தொடையில் அமர வைத்துள்ளார் போலும். சிவனார் வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடக்கி சுகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து, தன் இடது தொடையில் உமையை அமர்த்தி அணைத்துள்ளார். அன்னை இடது காலை தொங்கவிட்டு, வலது காலை குத்துக்காலிட்டு தன் தலைவனுக்கு நெருக்கமாக அமர்ந்துள்ளாள். சிவனுக்கு ஜடாமகுடமும், அன்னைக்கு கரண்ட மகுடமும் அழகு செய்கின்றன. காதுகளில் வியாழக்குண்டலங்கள் அணிந்திருக்கும் இறைவன் அணைத்திருக்கும் தேவி தாடங்கம் என்னும் தோடுகள் அணிந்துள்ளாள். கழுத்தில் முத்தாலான அல்லது மணிகளால் ஆன ஆபரணத்தை இருவரும் அணிந்துள்ளனர். இருவருக்கும் கைகளில் தோள்வளை, முன் வளைகள் அமைந்துள்ளன. அவை வெவ்வேறு கலைப்பாணியில் காட்டப்பட்டுள்ளன. இறைவனுக்கு மூன்று கைகளே தெரிகின்றன. பின் வலது கையில் மழுவை ஏந்தியுள்ளார். முன் வலது கை இறைவியின் தாடையைப் பிடிக்க செல்வதாக அமைந்துள்ளது. முன் இடது கை தேவியின் இடையை அணைத்துள்ளது. தேவி தன் வலது கையைில் மலர் ஒன்றை பிடித்தவாறும், இடது கையை பீடத்தில் ஊன்றி நித்ரா முத்திரையாகவும் வைத்துள்ளாள். ஈசனாருக்கு அரையாடையும், அம்மைக்கு கணுக்கால் வரை நீண்ட ஆடையும் அமைந்துள்ளன.
குறிப்புதவிகள்
ஆலிங்கனமூர்த்தி
சிற்பம்

ஆலிங்கனமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்