சிற்பம்

மன்மதன்
சிற்பத்தின் பெயர் | மன்மதன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | அழகர்கோயில் |
ஊர் | அழகர்கோயில் |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | அழகர் கோயில் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கரும்பு வில்லையும் மலர் அம்பையும் கையில் கொண்டுள்ள காமவேள் மீசையுடன் கூடிய புன்னகை ததும்பும் முகத்தினைக் கொண்டுள்ளான். வில்லேந்திய கரம் உடைந்துள்ளது. நெற்றிப்பட்டை விளங்க, முகப்புடன் கூடிய கிரீட மகுடம் தலையை அலங்கரிக்க, நீள்செவிகளில் குண்டலங்கள் கழுத்து வரை நீண்டு தொங்க, செவிப்பூக்கள் அணி செய்ய, சரப்பளியும், கண்டியும், ஆரமும் கழுத்தணிகளாக கொண்டும், கங்கணங்களையும், கடகங்களையும் கையணிகளாக கொண்டும் மன்மதன் மனங்கவர்கின்றான். அரையாடையணிந்த இடையில் இடைக்கட்டின் அணிகள் அதிக வரிசையில் காட்டப்பட்டுள்ளன. இயங்கு நிலையில் கால்கள் அமைந்துள்ளன.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விசயநகர-நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய கட்டுமானங்களின் தூண்களில் அமைக்கப்பட்ட இரதி-மன்மதன் சிற்பங்கள் புராணங்களின் வழியே வடிக்கப்பட்டாலும் அவற்றில் வாழ்வியல் கலைகளைப் பொருத்தி வடிவமைத்திருப்பது சிறப்பான கலைப்பாணியாகும்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |