சிற்பம்

விஷ்ணு
சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | அழகர்கோயில் |
ஊர் | அழகர்கோயில் |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | அழகர் கோயில் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
a:1:{i:0;s:2220:"விஷ்ணு கருடாரூடராய், ஆறு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்தினை ஏந்தியுள்ளார். முன்னிரு கரங்களில் வலது அபயமுத்திரையும், இடது கடி முத்திரையும் காட்டுகின்றன. நடுவிலுள்ள கரங்களில் வலது கரம் சிதைந்துள்ளது. இடது கரத்தில் பிடித்திருப்பது வில்லாய் இருக்கலாம். கிரீட மகுடம் தலையை அலங்கரிக்கிறது. செவிகளில் மகர குண்டலமும், கழுத்தில் முத்துச் சரங்களும், சரப்பளியும் அழகு செய்கின்றன. அரையாடை அணிந்துள்ளார். கைகளில் முன் வளைகளும், கேயூரங்களும், தோள்வளைகளும், கால்களில் கழல்களும், பாடகங்களும் அணி செய்கின்றன. இறைவனை தன் தோள்களில் தாங்கியுள்ள கருடன் கரண்ட மகுடராய், புன்னகை ததும்பும் எழில் முகத்தினராய், கருடாசனத்தில் தம்மிரு கைகளின் உள்ளங்கைகளில் தலைவன் பாதங்களை தாங்கியபடி உள்ளார். அரையாடை அணிந்துள்ள இவரின் கையணிகளும் காலணிகளும் தலைவரைப் போன்றே காட்டப்பட்டுள்ளன. மார்பில் புரிநூல் செல்கிறது. ";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது . இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் கோயில் என்று சொல்லப்படுகிறது . பிரபந்த பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான வைணவ திவ்ய தேசமாகும். இக்கோயில் பாண்டியர் மற்றும் நாயக்கர் கால கட்டிடக் கலைப் பாணிகளைப் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மண்டபங்களில் பெரும்பாலானவை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். கல்யாண மண்டபத்தின் தூண் சிற்பங்கள் விஷ்ணுவின் அவதாரங்கள், யாளி, அனுமன், அரசர்களின் உருவங்கள், கொடையாளிகள் ஆகிய திருவுருவங்களாகவும், அளவில் பெரியனவாகவும் வடிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு கருட வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள இந்த சிற்பம் பல்லாண்டு பாடல் பெற்ற இத்தலத்தில் அமைத்திருப்பது சிறப்பானதாகும்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |