சிற்பம்
நரசிம்மர்
சிற்பத்தின் பெயர் நரசிம்மர்
சிற்பத்தின்அமைவிடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் அழகர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நரசிம்மர் எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கிறார். சிறிய கிரீட மகுடம் தலையை அலங்கரிக்க, சிங்க முகத்தினை பிடரி அலங்கரிக்க, ஓங்கி உயர்ந்த நெடியவராய், வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி உயர்த்தி மடியில் இரண்யனை கிடத்தியுள்ளார். அரையாடை அணிந்து, கால்களில் தண்டையும், பாடகமும் அணிசெய்ய, எண்கைகளில் மேலிரு கைகளை உயர்த்தியும், அடுத்த இரு கைகளில் சங்கமும் சக்கரமும் கொண்டும், மற்ற இரு கைகள் கொண்டு திமிறிக் கொண்டு ஓட எத்தனிக்கும் இரண்யனின் காலையும், கையையும் பிடித்தவாறும் உள்ளார். இச்சிற்பக் காட்சி வதம் செய்யும் நிலைக்கு முந்தையக் காட்சியாகக் கொள்ளலாம். இரண்யனின் தலையை கிரீட மகுடம் அலங்கரிக்கிறது. பத்ரகுண்டலங்கள் அணிந்து, அரசனுக்குரிய ஆடையணிகள் கொண்டுள்ளான். முகத்தில் மீசை காணப்படுகிறது. சிறந்த வீரனின் உடல்வாகும், தோற்றப்பொலிவும் காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
அழகர் கோயிலின் நுழைவாயில் முதன்மை கோபுரத்தையடுத்து அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. வரிசையாக இருபுறமும் உள்ள தூண்களில் அளவில் பெரியனவாக இச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நரசிம்ம அவதாரச் சிற்பங்கள் இரண்டு வடிக்கப்பட்டுள்ளன. நரசிங்கர் இரண்யனை வதம் செய்யும் காட்சி இரண்டு தூண் சிற்பங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இரு நரசிம்மரின் உருவமைதியும் வேறுபட்டுள்ளன.
குறிப்புதவிகள்
நரசிம்மர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்