சிற்பம்

பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் | பிட்சாடனர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவலஞ்சுழி சுவேதராண்யேசுவரர் கோயில் |
ஊர் | திருவலஞ்சுழி |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | சுவேதராண்யேசுவரர் கோயில் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / சோழர் |
விளக்கம்
a:1:{i:0;s:2651:"பிச்சதேவர், கனமான பாதுகைகளை கால்களில் அணிந்தவராய், நாற்கரங்களோடு, மானுக்கு உணவூட்டியபடி, இடையில் அரையாடை அணிந்து, சடைமகுடம் தரித்துள்ளார். இடதுபுறம் மதியையும் ,வலதுபுறம் அரவத்தையும், உச்சி முகப்பில் கபாலத்தினையும் சடையிற் கொண்ட முக்கண்ணராய், இடது நீள்செவியில் பத்ரகுண்டலம் விளங்கிட, கழுத்து, கைகளில் அணிகள் துலங்கிட, நக்கன் நனி நாகரிகத்தனாய் நடக்கின்ற நளினக்காட்சி சோழர் கலைப்பாணியில் மிளிர்கிறது. முன்னிரு கைகளால் உடுக்கையை இசைக்கிறார். இடது தோளின் வழியே சாய்த்துள்ள நீண்ட முத்தலை சூலமானது தோளின் வழியே தலையின் பின்புறம் செல்கிறது. முத்தலை சூலத்தில் கபாலம் ஒன்று குத்தியவாறு காட்டப்பட்டுள்ளது பிச்ச தேவரின் தொன்மம். இக்கபாலம் பிரம்மதேவனின் தலையாகும். தாருகாவன முனிவர்களின் ஆணவ மலத்தை அடக்கிட, நக்கராய் வேடங்கொண்டு வசீகர புன்னகையுடன் முனிபத்தினியரிடம் தலைப்பலி தேற தலைவன் செல்லும் காட்சியிது. இச்சிற்பத்தில் நக்கன் உடையணிந்திருப்பதுவும், உடுக்கை வாசித்து செல்வதுவும் தனிச்சிறப்பாகும். அண்ணலின் முன்னால் பூதகணம் ஒன்று தலையில் வைத்த உணவு கலத்துடன் நடந்து செல்கிறது.";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நக்கன் பெருமானாகிய பிச்சதேவர் தலைப்பலி தேற தாருகாவனத்தில் நடந்து வந்த திருக்கோலம் சிற்பமாக இங்கு வடிக்கப்பட்டுள்ளது. தேவரின் வசீகர புன்னகையால் மயங்கியோர் தாருகாவன முனிபத்தினியர் மட்டுமல்ல சோழர்கால பெண்களுந் தான் போலும். பெரும்பாலும் அரசர்களின் தேவியர் எடுப்பித்த திருக்கோயில்களில் இச்சிற்பத்தை அமைத்திருந்ததுவும் இங்கு நோக்கத்தக்கது. நக்கர் பெருமானை திகம்பராய் அமைப்பதுவே பெரும்பாலான சோழர் கற்றளிகளில் காணமுடிகிறது. ஆனால் இச்சிற்பம் அண்ணல் அரையாடை அணிந்து அழகனாய் நடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |