மனித உருவங்கள், குறியீடுகள், மனிதர்கள் நடனம்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | விக்கிரமங்கலம் |
| வட்டம் | செக்காணூரனி |
| மாவட்டம் | மதுரை |
| ஓவியத்தின் பெயர் | மனித உருவங்கள், குறியீடுகள், மனிதர்கள் நடனம் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | பாறை ஓவியங்கள் |
|
விளக்கம்
மதுரை மாவட்டம் செக்காணூரனி அருகே உள்ள விக்கிரமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஓவாமலையில் குகை ஒன்று உள்ளது. இக்குகை சமவெளியில் இருந்து சுமார் பதினைந்து அடி உயரத்தில் உள்ளது. இந்த குகை இரண்டு பேர் தங்கும் அளவிலான சிறிய குகை. இதன் முன்புறம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழி கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கை ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இக்குகையின் உட்புற சுவர்களில் சில ஓவியங்கள் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இவற்றுள் பல உருவங்கள் மங்கிய நிலையில் உள்ளது. இங்கு மனித உருவங்களும் சில குறியீடுகளும் காணப்படுகிறது. அதில் மனிதர்கள் நடனம் ஆடுவது போன்றும் வேறு நிலைகளிலும் காட்டப்பட்டுள்ளனர். இவை யாவும் கோட்டோவியங்களாக அமைந்துள்ளது. இவ்வோவியங்கள் பெருங்கற்கால ஓவியங்களை ஒத்த சாயலில் உள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Oct 2022 |
| பார்வைகள் | 381 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 4 |