சிற்பம்
அர்த்தநாரீஸ்வரர்
சிற்பத்தின் பெயர் அர்த்தநாரீஸ்வரர்
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
உமையும் சிவனும் ஒன்றிணைந்த திருக்கோலம். தமிழகத்தின் முதல் அர்த்தநாரீசுவர சிற்ப வடிவம் இதுவாகும். மாதொரு பாகர் சிலம்பணிந்த பெண் பாகத்து இடது காலினை ஊன்றி, வலது காலை சற்று தளர்வாக வைத்து நின்றுள்ளார். சடை மகுடமும், கரண்ட மகுடமும் இரு பாதியாக தலைக்கோலமாயிருக்கிறது. நெற்றிப்பட்டை அணி செய்கின்றது. இடது செவியில் பத்ர குண்டலமும், வலது காதில் சங்கக்குழையும் விளங்குகின்றது. தோள்களில் வாகுமாலை காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் சவடி அணிந்துள்ளார். மார்பில் உரஸ்சூத்திரம் செல்கிறது. இடமார்பில் பிரம்மசூத்திரம் காணப்படுகின்றது. அரைப்பட்டிகை இடையில் காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடி பந்தம் வளைவாக முன் தொடைகளில் அமைந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் காட்டப்பட்டுள்ளது. நான்கு திருக்கைகளில் சிவ பாகத்தில் மழுவும், அபய முத்திரையும் அமைந்திருக்க, இட பாகத்தில் முன் கை நீண்டு தளிர்க்கையாகவும், பின் கையில் மலரைப் பிடித்தபடியும் அமைந்துள்ளன.
குறிப்புதவிகள்
அர்த்தநாரீஸ்வரர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்