சிற்பம்
யாளி முகம்
யாளி முகம்
சிற்பத்தின் பெயர் | யாளி முகம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
யாளியின் முகங்களினால் அணி செய்யப் பெற்ற குகைக் கோயில்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இராஜசிம்ம வர்மப் பல்லவன் குடைந்து செய்த அழகிய அமைதியான குகைக்கோயில் தான் புலிக்குகை என்று மக்களால் அழைக்கப்படும் யாளி மண்டபம். கம்பீரமான யாளி முகங்கள் குகையின் நுழைவாயிலை அலங்காரம் செய்கின்றன. அவை விழிப்புணர்வின் குறியீடு ஆகும். அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும் யாளிக்குகையில் முகப்பானது இருபுறமும் நான்கு நான்காக எட்டு யாளிகளும், மேலே மூன்று யாளிகளுமாய் மொத்தம் 11 யாளித் தலைகளின் தோரணமாய் அமைந்துள்ளது. அவற்றுள் மேலே வடிக்கப்பட்டுள்ள மூன்று யாளிகளுள் நடுவில் உள்ள யாளி முகம் எல்லாவற்றையும் விட பெரியது. குகைக்கோயிலின் நடுவில் படிகளின் மீதேறிச் செல்லும் வழி உள்ளது. முன் மண்டபம் கூடிய கருவறை அமைந்துள்ளது. ஆனால் வெற்றிடமாக உள்ளது. முன்மண்டபத் தூண்களில் யாளி, அதன் மீது ஏறிய மாவீரனின் அழகிய சிற்பங்கள் உள்ளன. யாளிக் குகையின் தொடக்கத்தில் இரண்டு யானைகளும் குதிரையும் வடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது அமைந்துள்ள இரு சதுரமான மாடத்துள் சிவன் அமர்ந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யாளி முகம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |