சிற்பம்

அகத்தியர்
சிற்பத்தின் பெயர் | அகத்தியர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில் |
ஊர் | திருக்கோடிக்காவல் |
வட்டம் | மயிலாடுதுறை |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
அமைவிடத்தின் பெயர் | திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
விளக்கம்
முற்காலச் சோழர்களின் கற்றளிகளில் கருவறைத் தென்திருச்சுற்றின் அர்த்தமண்டப புறக் கோட்டத்தில் தமிழ் முனிவராம் அகத்தியரின் அமர்ந்த கோல சிற்பம் அமைக்கப்படுவது மரபு. நெற்றிப்பட்டையுடன் கூடிய சடை மகுடம் தலைக்கோலமாய் தரித்தவராய் தமிழ் முனிவர் வலது கையில் அக்கமாலையையும், இடது கையில் கெண்டியையும் பிடித்துள்ளார். முகத்தில் தொங்கும் மீசை மற்றும் மார்பில் விழும் பரந்த தாடியுடன் காணப்படும் அகத்தியர் கழுத்தில் நீண்ட உருத்திராக்க மாலையும், மார்பில் முப்புரிநூலும் அணிந்துள்ளார். பீடத்தின் மீது முனிவர் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு உருள் தாங்கியின் மீது வைத்தபடி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அன்னாரின் தலைக்கு மேல் குடை ஒன்று காட்டப்பட்டுள்ளது. இருபுறமும் சாமரங்கள் உள்ளன. முனிவர் அமர்ந்துள்ள கோட்டத்தின் இருபுறமும் இரு முனிவர்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். அம்முனிவர்கள் தாடி, மீசையுடன் நெடிய உருவமாக காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் முதிய கோலத்தில் காட்டப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அகத்தியர் தமிழாய்ந்த முனிவர். அகத்தியரின் தலைமையில் தமிழ் நூல்கள் அரங்கேறியதாகவும், முதற்சங்கம் நடைபெற்றதாகவும் தொன்மங்கள் தெரிவிக்கின்றன. அகத்தியரை பாண்டியர் தங்கள் செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். சோழர்கள் தென்புற அர்த்தமண்டப கோட்டத்தில் அமைத்து வழிபட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |