டச்சுக் கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | டச்சுக் கல்லறை |
|---|---|
| அமைவிடம் | நாகப்பட்டினம் டச்சுக் கல்லறை |
| ஊர் | நாகப்பட்டினம் |
| வட்டம் | நாகப்பட்டினம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி |
|
விளக்கம்
1705-லும் அதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆலந்து நாட்டாரின் ஆளுநராக சர் சோன்சு வான் ஃச்டிலண்டு நாகையில் அமர்ந்து ஆண்டுள்ளார். அவரே கீழைக் கடற்கரைப் பகுதியில் ஆலந்தாரின் இயக்குநராக இருந்துள்ளார் என அறிய முடிகிறது. அவரது ஆளுகைக் காலச் சின்னமாகவும் நாகையில் குறிப்பிடத்தக்க ஒரு சின்னமாகவும் இக்கல்லறை மண்டபம் விளங்குகின்றது. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, பூம்புகார், தரங்கம்பாடி கோட்டை |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
டச்சுக்கார்கள் ஐரோப்பியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள். போர்த்துக்கீசியருக்கும் டச்சுக்காரருக்கும் இடையே அடிக்கடி பூசல்களும், போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இச்சமயத்தில் டச்சுக்காரர்களின் கை ஓங்கி இருந்தது. ஏனெனில் போர்த்துக்கீசியர் இலங்கையை டச்சுக்காரர் வசம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. பின்பு கி.பி. 1658இல் தூத்துக்குடியையும், கி.பி. 1659இல் நாகப்பட்டினத்தையும் டச்சுக்காரர் போர்த்துக்கீசியரிடமிருந்து பறித்துக் கொண்டனர். அதேபோல் கேரளக் கடற்கரையில் போர்த்துக்கீசியர் வசம் இருந்த சில இடங்களும் டச்சுக்காரர்களின் கைக்கு மாறின. நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் தலைநகரமாக அமைந்தது. இங்கு டச்சுக்காரர்கள் கோட்டை, கொத்தளங்களை வலிமையாகக் கட்டிக் கொண்டனர். அங்கு டச்சுக் கம்பெனியின் கவர்னர் தங்கினார். டச்சுப் பாதிரியாரான ஆபிரகாம் ரோகர்புலிக்காட்டில் தங்கித் தம் பணிகளைச் செய்து வந்தார். |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Sep 2018 |
| பார்வைகள் | 145 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |