சிற்பம்
சாமுண்டி
சாமுண்டி
சிற்பத்தின் பெயர் | சாமுண்டி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருமூலநாதர் கோயில் |
ஊர் | பேரங்கியூர் |
வட்டம் | திருவெண்ணெய்நல்லூர் |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர் |
விளக்கம்
சப்தமாதர்களில் ஒருவராய் அகோர வடிவில் விளங்கும் சாமுண்டி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சாமுண்டா எமனின் பெண் கூறாக விளங்குபவள். விஷ்ணுதர்மோத்திரபுராணம், இவர் இறந்த உடலினை ஆசனமாகக் கொண்டிருப்பார். கொடூரமான தோற்றத்தினையும், கோரைப் பற்களையும் கொண்டவர் என்று குறிப்பிடுகிறது. பத்து கரங்களில் முசலம், கவசம், பாணம் (அம்பு) அங்குசம், கட்கம் (சிறிய கத்தி), கேடயம், பாசம் (கயிறு), தனுஷ்(வில்), தண்டம் (கம்பு), பரசு (கோடரி), தரித்து ஒட்டிய வயிறுடன் காணப்படுவார் என்று குறிப்பிடுகிறது. பூர்வகாரணாகமம் குறிப்பிடும் பொழுது இவர் திறந்த வாயினையும், சிவனைப் போல தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவராகவும், ஆந்தையை வாகனமாகக் கொண்டு கழுகு பொறித்த கொடியினைக் கையில் ஏந்தியவாறிருப்பார் என்றும், இடது கரத்தில் மாமிசம் நிறைந்த கபாலத்தையும், மற்றொரு இடது கரத்தில் அக்னியும் வலது கரத்தில் நாகத்தினையும் காதில் சங்கபத்ர குண்டலமணிந்து காணப்படுவார் என்றும் கூறுகிறது. சிற்ப சாத்திரங்களில் சாமுண்டி நான்கு கரங்கள், மூன்று கண்கள், சிவந்த மேனியைக் கொண்டவர், தடித்த பரட்டையான மேல்நோக்கிய கேசத்தினை உடையவர், இவரது கைகளில் கபாலம், சூலம், அபயம், வரதம் தரித்திருப்பார், கபால மாலையை யக்ஞோபவீதமாக அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார், புலித்தோலாடையை அணிந்திருப்பார் என்று குறிப்பிடப்படுகிறாள். இச்சிற்பத்தில் சாமுண்டி ஜடாபாரம் தலைக் கோலமாய் கொண்டு, மண்டையோட்டினை உச்சியில் தலையணியாகக் கொண்டுள்ளாள். எலும்புகளால் ஆன நெற்றிப் பட்டை விளங்க, காதுகளில் நாகத்தினை குண்டலமாக தரித்துள்ளாள். கழுத்தில் கண்டிகை, மணியாரம், மார்பில் மண்டையோடுகளால் ஆன முப்புரி நூல் அணிந்துள்ளாள். மார்பில் குஜபந்தம் எனப்படும் மார்பு கச்சை அணிந்துள்ளாள். கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட நூலாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. முன் வலது கையில் முத்தலை சூலத்தை தாங்கியுள்ளார். இடது முன் கையில் கபாலத்தைக் கொண்டுள்ளார்., வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். பின்னங்கைகளில் உள்ளவை அறியக் கூடவில்லை. வெருட்டிய விழிகளுடன், கோரைப்பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க, உடலை இடதுபுறம் சாய்த்தவாறுஅகோர வடிவத்தில், அச்சந்தரும் தேவியாக சாமுண்டி காணப்படுகிறாள்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சாமுண்டி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |