சிற்பம்
பிராம்மி
பிராம்மி
சிற்பத்தின் பெயர் | பிராம்மி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருமூலநாதர் கோயில் |
ஊர் | பேரங்கியூர் |
வட்டம் | திருவெண்ணெய்நல்லூர் |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர் |
விளக்கம்
சப்தமாதர்களில் ஒருவராக விளங்கும் நான்முக நாயகி பிராம்மி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நான்முகனின் பெண் சக்தியாக விளங்கும் பிராம்மி பிரம்மனைப் போன்றே நான்கு முகங்களைக் கொண்டவராயும், ஜடாமகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் அக்கமாலை, கெண்டியும் பிடித்தவராயும் காணப்படுகிறார். முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் குண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், சவடியும், மார்பில் முப்புரி நூலும், கைகளில் தோள்வளை, முன் வளைகள், ஆகியன அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி சூத்திரம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் பிரம்மா, திருமால், வராகம், இந்திரன், முருகன் என்ற அனைவருமே தங்களுடைய அம்சமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்டவரே பிராம்மி ஆவார் என்றும், பிராம்மியின் வாகனமும் கொடியும் அன்னம், அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி, மேற்கு திசையின் அதிபதி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்னையர் எழுவரின் தோற்றமும் வடிவங்களும் மேல் ஆய்வுக்குரியன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பிராம்மி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |