சிற்பம்
சதிக்கல்
சிற்பத்தின் பெயர் சதிக்கல்
சிற்பத்தின்அமைவிடம் ஸ்ரீஅமணேசுவரர் கோயில்
ஊர் தேவனாம்பாளையம்
வட்டம் கிணத்துக்கடவு
மாவட்டம் கோயம்புத்தூர்
அமைவிடத்தின் பெயர் ஸ்ரீஅமணேசுவரர் கோயில் அருகே அமைந்துள்ள ஆலமரத்தடி
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இறந்துபட்ட வீரனோடு உயிர்துறந்த வீரப்பெண்ணான அவன் மனைவிக்கும் நினைவுக்கல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்பதை சிற்பத்தின் ஆடையணிகள் மற்றும் தலைக்கோலம் காட்டுகின்றது. போரில் இறந்த வீரன் இடையில் நீண்ட வாளைத் தாங்கியும், வலது கையால் ஈட்டி போன்ற ஒரு ஆயுதத்தை நிலத்தில் ஊன்றிய படியும் நிற்கின்றான். அருகில் அவன் மனைவி அவனுடன் உயிர்நீத்த வீரமங்கையாக வானுலகம் ஏகிய நிலையில் நிற்கின்றாள். இடு பக்கவாட்டு கொண்டை பெண்ணிற்கும், வலது பக்கவாட்டு கொண்டையலங்காரம் வீரனுக்கும் காட்டப்பட்டுள்ளன. தொள்ளைக் காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும் இருவரும் அணிந்துள்ளனர்.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தேவனாம்பாளையம் ஊராட்சி  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசுவரர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே சதிக்கல் சிற்பங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இங்கு நான்கு சதிக்கற்கள் கிடக்கின்றன. அதில் ஒன்றான இந்த சதிக்கல் சிற்பம் புடைப்புச் சிற்பமாக
குறிப்புதவிகள்
சதிக்கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 11
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்