சிற்பம்
நடுகல்-சதிக்கல்
சிற்பத்தின் பெயர் நடுகல்-சதிக்கல்
சிற்பத்தின்அமைவிடம் வடசித்தூர்
ஊர் வடசித்தூர்
வட்டம் பொள்ளாச்சி
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் வடசித்தூர் மதுரை வீரன் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வீரனொருவன் நடுவில் நின்றிருக்க, அவன் இருபுறமும் அவன் மனைவியர் இருவரும் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கின்றனர். வீரன் வாள் கேடயத்துடன் காட்சியளிக்கின்றார். பக்கவாட்டுக் கொண்டையலங்காரம் தலையணியாக மூவரும் கொண்டுள்ளனர். வீரன் முகத்தில் மீசையோடு காட்சியளிக்கிறது. அரையாடை இடையிலும், நீள்காதுகளில் குண்டலங்களும், கழுத்தில் நீண்ட முத்தாரமும், கால்களில் வீரக்கழல்களும், கைகளில் வளைகளும் காட்டப்பட்டுள்ளன. அவன் தம் பெண்டிர் கணுக்கால் வரை மடிப்புகளுடன் கூடிய ஆடையணிந்துள்ளனர். இருவரும் சமபாதத்தில் நின்றிருந்தாலும் தம் தலைவனை நோக்கி தலையை சற்று சாய்த்துள்ளனர். இப்பெண்டிர் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த வீரமகளிர் ஆவர். எனவே அவர்களின் நினைவாக இந்த சதிக்கல் எடுப்பிக்கப்பட்டுள்ளது எனலாம். இச்சிற்ப கலைப்பாணியை நோக்குங்கால் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதமுடிகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவியர்க்கும் சேர்த்து எடுப்பிக்கப்பட்ட இந்நடுகல் சதிக்கல் என அழைக்கப்படுகிறது. இறந்து பட்ட வீரனோடு அவன் தம் மனைவிமார் உயிர் விட்டுள்ளனர். பெண்மையின் இந்த அறப்பண்பு வீரர்களின் இணையில்லா வீரச்செயல்களுக்கு ஒப்பானது.
குறிப்புதவிகள்
நடுகல்-சதிக்கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்