
வீணாதர தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | வீணாதர தட்சிணாமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
ஊர் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | திருச்சிராப்பள்ளி |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
அமைவிடத்தின் பெயர் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
வீணையை மீட்டியபடி நின்ற கோலத்தில் வீணாதரர் விரிந்த சடைபாரத்துடன் காட்சியளிக்கிறார். முன்னிரு கைகள் வீணையை மீட்டுகிறது. பின்னிரு கைகளில் உடுக்கையும், அக்கமாலையும் கொண்டுள்ளார். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்று. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவவடிவங்களில் ஒன்றான ஞான வெளிப்பாட்டின் கூறாக வீணாதரர் மூர்த்தி வடிவம் கருதப்படுகிறது. |
|
ஆவண இருப்பிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2018 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |