கல்வெட்டு
நெகனூர்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் நெகனூர்பட்டி
ஊர் நெகனூர்பட்டி
வட்டம் செஞ்சி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் அடுக்கன் கல் - குகைத்தளம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு நான்குவரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டைச் சுற்றிலுமாக சதுரக்கட்டம் வெட்டப்பட்டுள்ளது. மெய் எழுத்துக்கள் புள்ளி பெற்றுள்ளன. எழுத்துக்களுக்குத் தலைக் கோடு உள்ளது. மழை, வெய்யிலால் கல்வெட்டு தேய்ந்துள்ளது. எனினும் படிப்பதற்கு இயலுமாறுள்ளது. இதன்காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டாகும். “1. பெரும் பொகழ் 2. சேக்கந்தி தாயியரு 3. சேக்கந்தண்ணி செ 4. யி வித்த பள்ளி’ என்பது கல்வெட்டு வாசகமாகும். பெரும் பொகழ் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயான சேக்கந்தண்ணி என்பவர் இந்த பள்ளியைச் செய்வித்தார் என்பது இதன் பொருளாகும். முதல்வரி கடைசி எழுத்து 'ழ்' சு. இராசவேலுவால் ‘ய்‘ என்று படிக்கப்பட்டது. இரண்டாம் வரி கடைசி எழுத்து ‘ரு’ எம்.டி. சம்பத்தால் 'உ' என்று படிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சேக்கந்தண்ணி என்பதை சேக்கந் அண்ணி என்று பிரித்துப் படிக்க வேண்டும். இவரைச் சமணப் பெண்துறவியாகக் கொள்ளலாம். சேக்கிழார் என்பதில் ‘சே’ குடிப் பெயராக இருப்பது போல இங்கும் குடிப்பெயர் எனக்கருதலாம். 'சே' என்பது காளை என்ற பொருளில் அகப்பாடலில் (அகம் 36 'கயிறு இடு கதச் சேப்போல) குறிக்கப்படுகிறது. கந்தி என்ற சொல் சீவக சிந்தாமணியில் (26:49 கறந்த பால் அணைய கந்தி) பெண் துறவி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. சூடாமணி கந்தி, கெளந்தி என்ற சொற்களுக்கும் பெண் துறவி என்று பொருள் சொல்கிறது. தாயியரு என்பது தற்காலக் கன்னட மொழியில் தாயாருக்கு வழக்கு சொல்லாக உள்ளது. அண்ணி என்பது மரியாதைச் சொல்லாகப் பயன்பட்டுள்ளது. பெரும்புகை என்றொரு ஊர் அருகில் உள்ளது. அங்குள்ள குன்றிலும் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் சொல்லப்படும் பெரும்பொகல் இன்றைய ‘பெரும்புகை’ யாக இருக்கலாம்.
குறிப்புதவிகள்
நெகனூர்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 200
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய கல்வெட்டு