
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
ஊர் | பாகலஹள்ளி |
வட்டம் | தருமபுரி |
மாவட்டம் | தருமபுரி |
அமைவிடத்தின் பெயர் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
இந்த நடுகல் தனித்துவமாகத் தெரிகின்றது. குழந்தை முருகன் போன்று இங்கு இளம் வீரன் காட்டப்பட்டுள்ளான். மார்பின் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலி அணிந்து, வீரனுக்குரிய அரையாடை இடையில் கொண்டு, உச்சிக்கொண்டை தலையணியாக விளங்க, மேலே தூக்கிய இடது கையில் வேலினை ஓங்கியவாறும், வலது கையில் ஏதோ ஒன்றை பிடித்தவாறும் வலது புறம் இயக்க நிலையில் நிற்கிறான். குழவிப் பருவத்தில் வீரனாய் நிற்கும் இந்நிலை காண்கையில் குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் வாளால் அரிந்து புதைக்கும் தமிழரின் வீரமரபு புலனாகிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தருமபுரி மாவட்டம், பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் சிறுவனான ஒரு இளம் வீரனுக்கு எடுப்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. |
|
ஆவண இருப்பிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |