சிற்பம்
நடுகல்
நடுகல்
சிற்பத்தின் பெயர் | நடுகல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
ஊர் | வேலூர் |
வட்டம் | வேலூர் |
மாவட்டம் | வேலூர் |
அமைவிடத்தின் பெயர் | வேலூர் அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | நடுகல் புடைப்புச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
நீண்ட செவ்வக வடிவ பலகைக் கல்லில் தோரண அலங்கார வளைவின் கீழ் புடைப்புச் சிற்பங்களாய் நின்ற நிலையில் ஆண் பெண் இணை உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்வுருவங்கள் அரசனும் அரசியுமாகலாம். தலைவன் வலது கையில் வாளை தூக்கியபடி நிற்கிறான். இடது கையில் வில் காட்டப்பட்டுள்ளது. ஆடையணிகள் தலைமைப் பண்பை காட்டி நிற்கின்றன. அருகில் வலது கையில் மலர் ஏந்தி தலைவி நிற்கிறாள். குந்தளக் கொண்டை வெகுவாக ரசிக்கத்தக்கது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே“ என்ற தொல்காப்பியரின் சொல்லிற்கிணங்க, நடுகல்லில் காட்டப்பட்டுள்ள ஆண், பெண் சிற்பங்கள் உருவமைதி கொண்டுள்ளன. வீரத்தலைவனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனையாளுக்கும் எடுப்பித்த நினைவுக்கல்லாகும் இது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
நடுகல்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |