சிற்பம்
வாலி வதம்
வாலி வதம்
சிற்பத்தின் பெயர் | வாலி வதம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
ஊர் | கும்பகோணம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
கருவறை விமானத்தின் தாங்குளத்தில் உள்ள இராமாயண புடைப்பு சிற்பக் காட்சி-வாலி வதம்
|
|
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்கிறான். வாலியின் வதையைக் கண்ட குரங்கினங்கள் அழுது அரற்றும் காட்சி. வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள். உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன். என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே? அப்படியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை என்று பலவாறாக புலம்புவதாக கம்பர் கூறுகிறார். அவ்வாறு அவள் புலம்பலும், உற்றார் உறவினர் புலம்பல்களும், அழுகை அரற்றல்களுமாய் இக்காட்சி அமைகிறது. இச்சிற்பக் காட்சியில் வாலி நீண்டு கிடக்கிறான். வாலிக்கு மேலும் கீழும் சுற்றியமர்ந்து கையில் தலையை வைத்து அழுது அரற்றுகின்றனர் வானர மக்களும் மனைவியும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வாலி வதம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |