சிற்பம்

இரட்டைப் புலவர்கள்
சிற்பத்தின் பெயர் | இரட்டைப் புலவர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் |
ஊர் | திருவாமாத்தூர் |
வட்டம் | போளூர் |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | அபிராமேசுவரர் கோயில் திருச்சுற்று |
சிற்பத்தின் வகை | தனிச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
a:1:{i:0;s:1754:"இரட்டைப்புலவர் கிபி 14-ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும் தெரிகிறது. இந்நிலையிலேயே இவர்களது சிற்பம் திருவாமாத்தூர் கோயிலில் அமைந்துள்ளது. இவர்கள் சிலேடையாகப் பாடுவதில் வல்லவராவர். மேலும் திருவாமாத்தூர் கலம்பகம் பாடியுள்ளனர். எனவே தான் திருவாமாத்தூரில் உள்ள சிவன் கோயிலில் இவர்களது திருவுருவம் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.";}
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.அகில் குட்டு |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திரு ஆமத்தூர்க் கலம்பகம் (திருவாமத்தூர்க் கலம்பகம்) என்னும் நூல் இரட்டைப்புலவர்கள் பாடிய நூல்களில் ஒன்று. இது 14 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலைப் பாடியதால் இவர்களைக் “கண்பாவு கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்பர். இந்நூலுக்கு முன்தோன்றிய கலம்ப நூல்களில் காணப்படாத இடைச்சியார், கொற்றியார், குறத்தியார், பிச்சியார், யோகினியார், வலைச்சியார் உறுப்புப் பாடல்கள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. சொற்பொருள் நயம், மடக்கு, கற்பனை முதலானவை அமைந்த இந்த நூலில் 101 பாடல்கள் உள்ளன. இவற்றில் காப்புச் செய்யுள் ஒன்று போக எஞ்சிய 100 பாடல்களும் அகப்பொருள் உணர்த்தும் சந்தப்பாடல்களாக அமைந்துள்ளன. திருஆமாத்தூர் கலம்பகம் பாடிய இரட்டைப் புலவர்களின் சிற்பம் திருவாமாத்தூர் சிவன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 8 |
பிடித்தவை | 0 |