ஜான் சின்க்ளேர் (John Sinclair1st Baron Pentland GCSI GCIE PC)
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | சென்னை |
| வட்டம் | சென்னை |
| மாவட்டம் | சென்னை |
| ஓவியர் பெயர் | |
| ஓவியத்தின் பெயர் | ஜான் சின்க்ளேர் (John Sinclair1st Baron Pentland GCSI GCIE PC) |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | நவீனக் கலைகள் - எண்ணெய் வண்ண உருவ ஓவியம் |
|
விளக்கம்
எரிக் ஹென்ரி கென்னிங்டன் (Eric Henri Kennington) எரிக் ஹென்ரி கென்னிங்டன் ஆர்.ஏ. (12 மார்ச் 1888 - ஏப்ரல் 13, 1960), ஒரு ஆங்கில சிற்பி. கலைஞர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டராகவும், இரண்டு உலகப் போர்களிலும் அதிகாரப்பூர்வ ஓவியராக பணியாற்றினார். கென்னிங்டன் லண்டனில் உள்ள செல்சியாவில் புகழ் பெற்ற ஓவியரும் புதிய ஆங்கில கலைக் குழுவின் நிறுவனர் உறுப்பினருமான தாமஸ் பெஞ்சமின் கெண்டிங்டன் (1856-1916), என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். அவர் ஆரம்ப கால கல்வியை செயின்ட் பால்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் கலைப் படிப்பை லாம்பெத் ஸ்கூல் ஆப் ஆர்ட் என்ற நிறுவனத்தில் பயின்றார். கென்னிங்டன் ஒரு போர்க் கள கலைஞராக, வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் சமாளிக்கும் தினசரி கஷ்டங்களை சித்தரிக்கிறார். யுத்த காலங்களில் அவர் பெரும்பாலும் ஓவியங்கள் மற்றும் விளக்கப்படங்கள் அதிகமாக வரைந்தார். அவரது புத்தக விளக்கப்படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது T.E.லாரன்ஸ்ஸின் ஞானத்தின் ஏழு தூண்கள் (Seven Pillars of Wisdom). கென்னிங்டன் ஒரு திறமையுள்ள சிற்பியாகவும் இருந்தார். அவரது படைப்புக்களில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுவது பாட்டர்ஸீய பூங்காவில் 24 வது கிழக்கு சுரேரியின் போர் நினைவுச் சின்னம் ஆகும். ஜான் சின்க்ளேர் பரோன் பெண்ட்லேண்ட் (7 July 1860 – 11 January 1925) ஜான் சின்க்ளேர் ஒரு ஸ்காட்டிஷ் லிபரல் கட்சி அரசியல்வாதி, சிப்பாய், தோழர், நிர்வாகி மற்றும் பிரைவேட் கவுன்சிலர் ஆவார். இவர் 1892 இல் இங்கிலாந்தில் படித்தார், பின்னர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) உறுப்பினராக நுழைந்தார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1892 முதல் 1895 வரை, 1897 முதல் 1909 வரை பணியாற்றினார். 1905 முதல் 1912 வரை ஸ்காட்லாந்தின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் 1912 முதல் 1919 வரை மெட்ராஸ் ஆளுநராக இருந்தார். சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது, உள்நாட்டு பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் ஆர்வம் காட்டினார். இவர் தீவிரமான தாராளவாத கொள்கையை உடையவர், சமூக நீதி மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு சீர்திருத்தங்களை ஆதரித்தார். இராமேஸ்வரத்தில் போக்குவரத்துக்காக பாம்பன் ரயில் பாலத்தைக் கட்டி அதை 24 பிப்ரவரி 1914 இல் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். 1914 ஆம் ஆண்டில், மெட்ராஸ் நகரத்தின் நகர திட்டமிடலில் ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு ஸ்காட்லாந்து தாவரவியலாளரும் கட்டிடக் கலைஞருமான பேட்ரிக் கெடஸை பென்ன்லாண்ட் அழைத்தார். இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே இடையில் தொடர்ச்சியாக அலைந்துகொண்டிருக்கும் ஒரு மருத்துவமனைக் கப்பலை உருவாக்கினார், அதன் மூலம் இந்தியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையில், கடலில் காயமடைந்த மாலுமிகளை கவனித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக் கப்பல் சென்னையில் உள்ள சில முக்கிய குடிமக்களால் நிதி வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இவர் காலத்தில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கான இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஹோம் ரூல் இயக்கம் 1915 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. இதனை ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த அன்னி பெசண்ட் மற்றும் சர் எஸ். சுப்ரமணியா ஐயர் போன்றோர் தலைமையேற்று நடத்தி வந்தனர். அந்த இயக்கம் வலிமையாக இருந்து வந்த போது ஜூன் 1917 ல் அன்னி பெசண்ட் பரோன் பெண்ட்லேண்டால் கைது செய்யப்பட்டார். பெண்டலண்ட் கிளாசிக்கல் பிரிட்டிஷ் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார். இந்தியர்களை சமாதானப்படுத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேலும் வார்த்தைகளை விட செயல்கள் முக்கியமானவை என்ற கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர். இந்திய கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜன் இங்கிலாந்திற்கு பயணிக்க பெண்ட்லாண்ட் உதவி செய்தார். பெண்டலண்ட் ஜான் சின்க்ளேர் 1925 இல் இறந்த பின் எடின்பர்க் நகரில் உள்ள டீன் கல்லறையில் புதைக்கப்பட்டார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தணிகை மணி |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 03 Jul 2017 |
| பார்வைகள் | 89 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |