சிற்பம்
நடுகல் விறலியர்
நடுகல் விறலியர்
சிற்பத்தின் பெயர் | நடுகல் விறலியர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பெண்ணேசுவர மடம் |
ஊர் | பெண்ணேசுவர மடம் |
வட்டம் | பையூர் பற்று |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நடுகல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
மன்னனின் வெற்றிக்காக பாடும் விறலியர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விறலியர் என்போர் பாணர்களின் கூட்டத்தில் இடம் பெறுபவர்கள். எனவே விறலி பாண்மகள் எனப்படுவாள். விறலியர் பாணர்களுடன் இசைக்கருவிகளோடு செல்வர். பண்ணிசைக்கேற்ப பாடுவர். இவர்கள் அக உணர்வுகளைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டுவதில் விறல்பட (திறம்பட) நடிக்கும் ஆற்றல் உடையவர்கள். விறலியர் தலைவன், மன்னனின் வெற்றிக்காக இசைத்துப் பாடுவர். தலைவனின் வெற்றி, புகழ், கொடை, மரபு ஆகியவை குறித்துப் பாடுவர். சங்க இலக்கியங்கள் விறலியர் பலவிடங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். பெண்ணேசுவர மடத்தின் மலையடிவாரங்களில் காணப்படும் நடுகல் சிற்பங்களினூடே விறலியர் புடைப்புச் சிற்பமும் காணப்படுகின்றது. இச்சிற்பத் தொகுதியில் இரு விறலியர் காட்டப்பட்டுள்ளனர். ஒரு பெண் கையில் வீணையை வைத்து மீட்டுகிறாள். மற்றொருவள் அபிநயம் காட்டுகிறாள். இப்பெண்கள் இருவரும் இடம்பெற்றுள்ள இப்புடைப்புச் சிற்பம் கோயில் கட்டுமானத்தில் அமைந்ததா அல்லது நினைவுக்கல்லாக அமைந்ததா என்பது அறியக்கூடவில்லை.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நடுகல் விறலியர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 21 |
பிடித்தவை | 0 |