சிற்பம்

நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மலையம்பாளையம் மேல்நிலைப்பள்ளி |
ஊர் | மலையம்பாளையம் |
வட்டம் | அவிநாசி |
மாவட்டம் | திருப்பூர் |
அமைவிடத்தின் பெயர் | மலையம்பாளையம் மேல்நிலைப்பள்ளி வளாகம் |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-16 ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
சதுரவடிவக் கல்லில் இயங்கு நிலை புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ள இந்த நடுகல் வீரனின் முகம் சிதைந்துள்ளது. இடது கையில் அம்பைப் பிடித்துள்ளான். வலது கை ஓங்கிய வாளைக் கொண்டுள்ளது. இடையில் குறுவாள் தொங்குகிறது. அரையாடையின் இடை முடிச்சுகள் இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. முகம் நேராகவும், நேர்கொண்ட பார்வையாகவும், கால்களை பக்கவாட்டில் வைத்தபடியும் வீரன் உள்ளான். தலையலங்காரத்தைக் கொண்டு இச்சிற்பம் கி.பி.-15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறியப்படுகிறது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் அமைந்துள்ள மலையம்பாளையம் என்னும் ஊரின் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த நடுகல் சிற்பத்தின் உருவமைதியைக் கொண்டு விசயநகரர் காலத்தைச் சேர்ந்த்தாக கருத இடமுண்டு.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Mar 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |