கல்வெட்டு
திருவாதவூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருவாதவூர்
ஊர் திருவாதவூர்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உவா மலை சமண குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊராகப் போற்றப்படும் பெருமை உடையது. இவ்வூரின் புறத்தே உவாமலை என்றழைக்கப்படும் குன்றுள்ளது. இக்குன்றில் உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளை ஐ.மகாதேவன் 1996-இல் கண்டறிந்தார். பரசு என்ற உபசரால் இந்த உறைவிடம் (குகைத்தளம்) அமைக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். உபசன் என்ற சொல் உபாத்யாயன், சமய ஆசிரியர் என்ற பொருள் உடையது. கல்வெட்டில் உள்ள ‘உபசன்’ என்ற சொல் கொங்கற் புளியங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டிலும் காணப்படுகிறது. இச்சொல் உவச்சரையும் குறிக்கின்றது. இவர்கள் பல்லவர்காலக் கல்வெட்டுக்களில் கோயிலில் வாத்தியம் வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். திருவாய் மொழியில் பரசுதல் என்ற சொல், பாடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
திருவாதவூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 69
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு