சிற்பம்

சோழ அரசர்
சிற்பத்தின் பெயர் | சோழ அரசர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குறங்கணி நாதர் கோயில் |
ஊர் | சீனிவாசநல்லூர் |
வட்டம் | லால்குடி |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
கருவறை விமானத்தின் கோட்டத்தில் நிற்கின்ற சோழ அரசர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இரு அரைத்தூண்களுக்கிடையே அமைந்த கோட்டத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது. தாமரைப் பீடத்தின் மீது ஸ்தானகத்தில் இளையவர் ஒருவர் பக்கவாட்டில் நிற்கிறார். ஜடாமகுடராய் தோற்றமளிக்கும் இவ்வழகிய இளைஞர் சோழ அரசனாய் இருக்கலாம். சோழர் குல இளைஞர்களின் உடல் கட்டமைப்பிலும், ஆடையணிகளிலும் இவர் காட்டப்பட்டுள்ளார். கழுத்தில் சரப்பளி அணி செய்ய, நீள் காதுகளில் அணிகள் இல்லை. இரு கைகளையும் வணங்கும் நிலையில் கைகளில் மலர்களை வைத்துள்ளார். தோள்களில் தோள்மாலை, கைகளில் தோள்வளை, முன்வளைகள் விளங்குகின்றன. முப்புரி நூல் இடது தோள் வழியாக உடலின் பின்புறம் செல்கிறது. பிரம்மமுடிச்சு இடமார்பில் உள்ளது. இறுக்கிக் கட்டிய இடையாடையால் வயிறு சற்று பிதுங்கித் தெரிகின்றது.முகப்புள்ள இடைவார்ப் பட்டையுடன் மடிப்புகளுடன் கூடிய பட்டாடை அணிந்துள்ளார். இவரின் இடைக்கட்டு முடிச்சு உடலின் பின்புறம் தெரிகிறது. கால்களில் பாடகம் அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |