கல்வெட்டு
மேட்டுப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேட்டுப்பட்டி |
|---|---|
| ஊர் | மேட்டுப்பட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சித்தர்மலை-மகாலிங்க மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சமண சமயத்தில் உயர்கதி அடைந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் அவர்கள் வாழ்ந்த மலைகளைச் சித்தர்மலை என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சித்தர்மலைக்கு அருகிலுள்ள குகைத்தளத்தில் உள்ள பத்து கல்வெட்டினுள் முதலாவது கல்வெட்டில் சிரமணர் என்ற சொல் மொழி முதல் சகரம் நீக்கப்பட்டு அமணன் என்று குறிப்பிடப்படுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு புகளூர் கல்வெட்டிலும் இச்சொல் (அமண்ணன்) வருகிறது. இக்கல்வெட்டு குகைத் தளத்தின் முகப்புப் பாறையில் தென்புறம் உள்ளது. ஐந்து சொற்களுடன் ஒரு மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். மதுரையைச் சார்ந்த அமணன் (சமண முனிவர்) அத்திரனுடைய அல்லது அத்திரன் உறைவிடம், இது உதயனனின் கொடை என்று இதற்குப் பொருள் கூறலாம். மதுரை என்ற சொல் இக்கல்வெட்டில் ‘மதிரை’ என்று குறிப்பிடப்படுகிறது. அழகர் மலை தமிழ்-பிராமி கல்வெட்டுகளிலும் ‘மதிரை’ என்ற சொல் வருகிறது. இக்கல்வெட்டில் 'உதயனஸ’ என்ற சொல்லின் இறுதியில் ‘உடையது’ என்ற பொருளில் வரும் ‘ஸ’ என்ற வேற்றுமை உருபு காணப்படுகிறது. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வேறு எங்கும் இது காணப்படவில்லை. சாதவாகனர் வெளியிட்ட இருமொழி வாசகங்கள் உடைய காசுகளில் மேற்சொன்ன ‘ஸ’ என்ற வேற்றுமை உருபு காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 83 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |