கல்வெட்டு
சின்னய்யன்பேட்டை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சின்னய்யன்பேட்டை |
|---|---|
| ஊர் | சின்னய்யன்பேட்டை |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலை. இக்கல்வெட்டு மூன்று தனிக்கற்களில் எழுதப்பட்டுள்ளது. வீரனின் உருவம் ஒரு கல்லிலும், கல்வெட்டின் முதல் ஏழு வரிகள் மற்றொரு கல்லிலும், பிற ஆறு வரிகள் மற்றொன்றிலுமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் கம்பவர்மனின் மூன்றாவது ஆட்சி ஆண்டில் வயிரமேக வாணகோவரையரின் சேவகனும் மேல்குன்றை நாட்டு மலையனூரில் வாழும் செம்பத்தொண்டன் மகனுமான காரிப்பெருமான்,பாசாற்றூரைச் சேர்ந்த எருமை நிரைகளை எயில் நாட்டார் கவர முற்பட்ட போது அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 69 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |