கல்வெட்டு
அகரஞ்சேரி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அகரஞ்சேரி |
|---|---|
| ஊர் | அகரஞ்சேரி |
| வட்டம் | மாதனூர் |
| மாவட்டம் | வேலூர் |
| அமைவிடத்தின் பெயர் | அகரஞ்சேரி |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வேலூர் மாவட்டம் அகரஞ் சேரி நடுகல் கல்வெட்டு. பெரும்போர் ஒன்றைக் குறிப்பிடும் சாசனம் எனலாம். யானை மீது அமர்ந்த தலைவனும் அவனுக்குக் குடைபிடிக்கும் போர்வீரனும் கல்வெட்டின் கீழ்ப்பகுதியிலும் கல்வெட்டின் 9 வரிகள் மேல்பகுதியிலும் உள்ளன. சிம்மவர்மனுடைய 19ஆம் ஆட்சியாண்டின் போது (கி.பி. 554 இல்) ஆடித்திங்கள் புணர்பூச நாளன்று தகடூர் பிடிமண்ணேரிக்கீழ் உடையார் தண்டதத்தோடு (படையோடு) 'சென்று இலாடத்தரையர் மற்றும் மழவரைசரோடு போரிட்டபோது கங்கதி அரைசரின் சேவகர் மாதப்பெருதிரைசர் இறந்துபட அவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். கல் என்பதை நடுகல் என்றும் நாடு என்பதை வேளான் நிலம் என்றும் கொண்டு நடுகல் வழிபாட்டுக்குத் தந்த நிலமாகக் கருதலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 72 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 3 |