கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதல்-திருச்சுற்றுமதில்-வெளிப்புறச்சுவர் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கோயில் இறைவன் மீது பற்றுக்கொண்ட அன்பர்கள் சிலர் தந்த தானச் செய்தி குறிப்பிடப்படுகின்றது. இவ்விறைவர்க்கு ஆடித் திருநாள் பத்து நாட்கள் நடந்தது என்பதும், அதற்காக விடப்பட்ட கிராமம், நிலத்தானம், கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்கும் விடப்பட்ட தானம், பூசைக்கு வேண்டிய பூசைப் பொருட்கள் பற்றிய செய்தியும் தெரிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு தொடக்கம் இல்லாத இக்கல்வெட்டாக அமைந்துள்ளது. இக்கோயில் இறைவர்க்கு நடைபெற்ற அமாவாசைத் திருநாளுக்கு வழங்கப்பட்ட பூசைப் பொருட்கள், தளிகைப் (உணவுப்)பொருட்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இவ்வமாவாசைத் திருநாள் மாதந்தோறும் நடைபெற்றது என்பதும், அதற்கான தேவைப் பொருட்கள் முட்டாமல் நிகழவேண்டும் என ஓம்படைக்கிளவி அமைத்துக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் முடிவில் வடமொழிச் சுலோகமும் தரப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 68 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |