MARC காட்சி

Back
வராகமூர்த்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a வராகமூர்த்தி
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a நிலமகளை மீட்டெடுத்து தன் மடியில் அமர்த்திய பூவராகர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a திருமாலின் பத்து அவதாரங்களுள் வராக அவதாரம் மூன்றாவதாகும். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர்செய்து வென்று நிலமகளை மீட்டெடுத்து தன் மடியில் இருத்தினார் என்கிறது வராக புராணம். இக்காட்சி மாமல்லையில் சிற்பமாக்கப்பட்டுள்ளது. கேழல் முகத்தினை உடைய வராகமூர்த்தி, இடது காலை ஊன்றி, வலது காலை உயர்த்தி ஆதிசேடனின் தலை மேல் வைத்துள்ளார். உயர்த்திய வலது காலின் தொடை மேல் நில மகளை இருத்தியுள்ளார். நான்கு திருக்கைகளைக் கொண்ட வராகர் முன் வலது கையால் தேவியின் பிருஷ்டத்தை அணைத்துள்ளார். இடது முன் கை தேவியின் காலை ஆதூரமாகப் பற்றியுள்ளது. பின்னிரு கைகளில் எறிநிலை சக்கரம், சங்கு ஏந்தியுள்ளார். ,ரத்தின மகுடந்தரித்துள்ள வராகர், கழுத்தில் கண்டிகையும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் அணிந்துள்ளார். இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரையாடை தெரிகின்றது. கேழல் முகம் நிலமகளின் வல மார்பினை உரசுகிறது. நாணமுடன் வராகரை ஏறிட்டுப் பார்க்கும் தேவி கரண்ட மகுடம் அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன்வளைகள், கால்களில் சதங்கைகள் ஆகியன அழகு செய்ய இடைக்கட்டின் பகுதி தொடையின் வழி கீழே விழுமாறு அமர்ந்துள்ளாள். வராகமூர்த்தியின் வலது காலின் கீழே கடல் அலைகளுக்கு நடுவே ஐந்து தலைகளுடன் ஆதிசேடன் என்னும் நாக-மனித உருவம் காட்டப்பட்டுள்ளது. ஆதிசேடன் கைகளைக் கூப்பி வணங்குகிறான். அருகே அவன் மனைவி நாகராணி வணங்கி நிற்கிறாள். அருகே முனிவர் ஒருவர் நிற்கிறார். மேலே ஒளி வட்டத்துடன் சூரியன் இக்காட்சியைக் கண்டு வணங்குகிறான். வராகரின் இடதுபுறம் உலகப் படைப்புக் கடவுளான நான்முகன் நான்கு திருக்கரங்களுடன் விளங்குகிறார். இடது கீழ்க்கரத்தில் கமண்டலத்தைத் தாங்கியுள்ளார். இடது மேற்கை ஏந்தல் கையாக உள்ளது. வலது பின்கை இடையில் வைத்தவாறு கடி முத்திரையாகவும், வலது முன்கை கடக முத்திரையாகவும் அமைந்துள்ளன. கணுக்கால் வரையிலான நீண்ட ஆடையை கால்களுக்கு இடையே குறுக்காக மடித்துக் கட்டியுள்ளார். இடைக்கட்டு அமைந்துள்ளது. மார்பில் முப்புரிநூல், கழுத்தில் கண்டிகை, வலது தோளில் மேலாடையின் முத்தானை, கைகளில வளைகள் ஆகியவை விளங்குகின்றன. நான்முகன் நேர்முகமாக நிற்கிறார். அவருக்கு அருகில் நிற்கும் நாரதமுனிவர் பின்புறமாகக் காட்டப்பட்டுள்ளார். நான்முகனுக்கு மேலே இந்திரன் இக்காட்சியைக் காண்கிறான்.
653 : _ _ |a வராஹமூர்த்தி, வராக அவதாரம், பூவராகர், வராக மண்டபம், வராக குகை, மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள்,பல்லவர் சிற்பங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம்
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
914 : _ _ |a 12.626927
915 : _ _ |a 80.1927109
995 : _ _ |a TVA_SCL_000426
barcode : TVA_SCL_000426
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000426_மாமல்லபுரம்_வராகமூர்த்தி-001.jpg