| 245 |
: |
_ _ |a நாண்மதியப் பெருமாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருத்தலைச்சங்க நாண்மதியம் |
| 520 |
: |
_ _ |a சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாசமரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று சுட்டினர். தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும் சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும் பெயர் ஊருக்கு வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இது ஒன்றுதான். திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பில் இட்ட பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். பெரிய திருமடலிலும் (2674 இல் 134) இத்தலத்தை திருமங்கை மீளவும் மங்களாசாசனம் செய்கிறார். கதிர்மதியம் என்று ஆண்டாள் திருப்பாவையில் கூறியுள்ளதையும் இப்பெருமானுக்கிட்ட மங்களாசாசனமாகக் கொள்ளலாம். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், மங்களாசாசனம், திவ்யதேசம், தலைச்சங்காடு, திருத்தலைச்சங்க நாண்மதியம், ஆக்கூர், சீர்காழி, நாகப்பட்டினம், கதிர்மதியம், திருமங்கையாழ்வார், சோழநாட்டுத் திருப்பதி, |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
| 914 |
: |
_ _ |a 10.9230269 |
| 915 |
: |
_ _ |a 79.4408526 |
| 916 |
: |
_ _ |a நாண்மதியப் பெருமாள் |
| 917 |
: |
_ _ |a வெண்சுடர்ப் பெருமாள் |
| 918 |
: |
_ _ |a தலைச்சங்க நாச்சியார் |
| 923 |
: |
_ _ |a சந்திர புஷ்கரணி |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி |
| 927 |
: |
_ _ |a வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மன், முதலாம் ராசராசன், முதலாம் இராசேந்திரன், ஆகிய சோழ மன்னவர்கள் இத்தலத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. திருக்கோட்டியூர் பெண்ணொருத்தி இக்கோவிலுக்குச் செய்த நிலதானத்தைப் பற்றி வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மனான இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது. இவனாட்சியின் 12ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு கொல்லம் என்னும் ஊரைச் சேர்ந்த வணிகன் இக்கோவிலுக்குச் செய்த விளக்கு தானத்தைப் பற்றிக் கூறுகிறது. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார், உற்சவர் வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை. |
| 930 |
: |
_ _ |a இத்தலம் பற்றிய விபரங்கள் பிரம்மாண்ட புராணத்தில் சிறிதளவே கிடைக்கிறது. இரவில் நமக்கு ஒளிதரும் நாள் மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதையேதான் வடவானரும் “சந்திரசாப ஹரப்” பெருமாள் என்றழைத்தனர். விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இப்பெருமாள் ஏந்தியிருப்பதாலும் தலைச்சங்கானம் ஆயிற்றென்பர். சங்ககாலத்தில் இப்பகுதி தலைச்சங்கானம் என வழங்கப்பட்டு காலப்போக்கில் அது மருவி தலைச்சங்கமாயிற்று என்று தமிழாய்வாளர பகர்வர். இதுவே இப்போது தலைச்சங்காடு ஆயிற்று. 4. இவ்வூரில் இருந்த மாடலன் என்னும் மறையோன் ஒருவன் அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங்கொண்டு குமரியாற்றில் முறைப்படி தீர்த்தமாடி மீண்டும் தன் கிளைஞர் (உறவினர்) வாழும் சொந்த ஊரான தலைச் சங்கானத்திற்கு மீள்கிறார் என்று இவ்வூரைப்பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a சீர்காழி தோணியப்பர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில், தலைச்சங்காடு சிவன் கோயில் |
| 935 |
: |
_ _ |a சீர்காழிக்கு தென்கிழக்கே சுமார் 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் போய் அங்கிருந்து சீர்காழி செல்லும் பாதையில் 2 மைல் தூரம் சென்று இத்தலத்தை அடையலாம். தற்போது ஆக்கூரிலிருந்து இவ்வழியாகப் பல பேருந்துகள் செல்கின்றன. சீர்காழியிலிருந்தும் தற்போது பேருந்து வழிகள் உண்டு. பேருந்துகள் செல்லும் சாலையில் இத்தலத்தின் பெயர் எழுதப்பட்டுள்ள இடத்திலிருந்து இறங்கி சுமார் 2 பர்லாங் தூரம் சென்று இத்தலத்தை அடையலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a தலைச்சங்காடு |
| 938 |
: |
_ _ |a சீர்காழி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a சீர்காழி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000191 |
| barcode |
: |
TVA_TEM_000191 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000191/TVA_TEM_000191_நாண்மதியம்_நிண்மதியப்பெருமாள்-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v063.mp4
TVA_TEM_000191/TVA_TEM_000191_நாண்மதியம்_நிண்மதியப்பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000191/TVA_TEM_000191_நாண்மதியம்_நிண்மதியப்பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000191/TVA_TEM_000191_நாண்மதியம்_நிண்மதியப்பெருமாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_000191/TVA_TEM_000191_நாண்மதியம்_நிண்மதியப்பெருமாள்-கோயில்-0004.jpg
|