MARC காட்சி

Back
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
245 : _ _ |a திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் -
246 : _ _ |a திருஉத்தரகோசமங்கை, தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி
520 : _ _ |a இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர். சேது வளநாட்டின் தலைநகரான ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 15 கி.மீ., தூரத்தில் திருஉத்தரகோசமங்கை தலம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகி அம்பாளுடன் அருள் பாலிக்கும் மங்களநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானதாகவும், தொன்மை யானதாகவும் அமைந்துள்ளது.  வேத ஆகமத்தை உமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணியதலம் என்பதால் "திரு' எனும் தெய்வ அடைமொழியுடன் இத்தலம் திருஉத்தரகோசமங்கை என பெயர் பெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றாகிய "வலைவீசிய லீலை' நடந்த இடமான பரதவர்கள் நிறைந்த கடற்பகுதி திருஉத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், அம்பிகையை பரதவர் (மீனவர்) மகளாக பிறக்கச் செய்து, பின் அவளுக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள் 60 ஆயிரம் பேருக்கும் ஞானோபதேசம் செய்து, அம்பிகையோடு மதுரை சேர்ந்ததாக புராணம் கூறுகிறது.  மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம், அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது. அவர் தன் முற்பிறவில் இங்கு அவதரித்து , சிவபெருமான் கட்டளைப்படி வேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து , அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து, இங்கு வந்து "மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே' என திருவாசகத்தால் பாடியிருப்பது இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும்.  சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும் போது பாடப்படும் ""திருப்பொன்னூஞ்சல்'' பாடல், மாணிக்கவாசகரால் இக்கோயிலில் பாடப் பட்டதாகும்.  அருணகிரியாரும் இத்தலத்தை பற்றி பாடல்களை பாடியுள்ளார்.  பாண்டித்தலங்கள் பதினான்கும் தோன்றும் முன்பே, ஓர் இலந்தை மரத் தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவரே, மங்களநாதர் ஆவார். "மண் முந்தியோ, மங்கை முந்தியோ'' என்று தொன்று தொட்டு வழக்கத்திலிருந்து, மண்ணிலும் முந்தியது "மங்கை' என்னும் திருஉத்தரகோசமங்கை தலம் என்பதை அறியலாம். இத்தலத்திற்கு ""தென் கைலாயம்'' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தொன்மையான இக் கோயிலில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் (தல விருட்சம்) உள்ளது. ஆலயத்தின் வடக்கில் ஆறு அடி உயர மரகத நடராஜருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் இருக்கும் மரகத நடராஜரை, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் நடக்கும் அபிஷேகத்தின் போது, பச்சை வடிவாய் மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாகும். இந்த கோயிலின் உள்ள நடராஜர் சிலை, நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆனதால், இத்தலம் "ரத்தினசபை' என்றும், சிதம்பரத்தில் ஆடும் முன் இங்கு ஆடி காட்சி கொடுத்ததால் "ஆதிசிதம்பரம்' எனவும் அழைக்கப்படுகிறது. சிவலிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர்.  ஆனால், இக்கோயிலில் உள்ள ஸ்படிக மற்றும் மரகத லிங்கத்திற்கு தினம் தினம் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.  இவ்விரு லிங்கங்களும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் உச்சிகால பூஜையின் போது, இந்த லிங்கங்களை நடராஜர் சன்னதி முன்மண்டபத்திலுள்ள ஒரு பீடத்தில் வைத்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் இந்த லிங்கங்களை நடராஜர் சன்னதி படியில் வைக்கின்றனர்.  நடராஜருக்கு தினசரி அபிஷேகம் இல்லாததால், அவரது பிரதிநிதியாக இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் மூலம் நடராஜருக்கே அபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒருநாள் மட்டும் அன்னாபிஷேகம் நடப்பதில்லை. 
653 : _ _ |a கோயில், திருஉத்தரகோசமங்கை, மங்களநாதர் கோயில், ஜோதிர்லிங்கம், சைவம், சிவன் கோயில், இராமநாதபுரம், திருமுறை, பாடல் பெற்ற தலம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி
909 : _ _ |a 1
910 : _ _ |a திருவாசகப் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 9.30799249
915 : _ _ |a 78.75889383
916 : _ _ |a மங்களேசுவரர், மங்களநாதர்
917 : _ _ |a காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்
918 : _ _ |a மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி
922 : _ _ |a இலந்தை
923 : _ _ |a அக்கினி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம், மொய்யார் தடம் பொய்கை தீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a ஆனி திருமஞ்சனம், ஆருத்திரா தரிசனம்
929 : _ _ |a மூலவர் சதுர ஆவுடையார். உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். பிரகார அழகு இராமேஸ்வரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகர், இடப்பால் திரும்பி உமாமகேசுவரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. உமாமகேசுவரர் சந்நிதிக்கு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அமைந்துள்ளது.
930 : _ _ |a பாண்டிய நாட்டில் உள்ள தலம். மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம். இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : - ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார். மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார். மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.
932 : _ _ |a உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை. இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர். இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு. ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருப்புல்லாணி, இராமேஸ்வரம், தேவிப்பட்டினம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம்
935 : _ _ |a மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம். மதுரை-மண்டபம் சாலையில் இராமநாதபுரத்திலிருந்து மேற்கே 10 கி.மீ, பரமக்குடியிலிருந்து கிழக்கே 32 கி.மீ.
936 : _ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
937 : _ _ |a உத்தரகோசமங்கை
938 : _ _ |a இராமேஸ்வரம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a உத்தரகோசமங்கை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000153
barcode : TVA_TEM_000153
book category : சைவம்
cover images TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0013.jpg :
Primary File :

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0022.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0021.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0001.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0002.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0003.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0004.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0005.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0006.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0007.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0008.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0009.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0010.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0011.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0012.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0013.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0014.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0015.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0016.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0017.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0018.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0019.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0020.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0023.jpg

TVA_TEM_000153/TVA_TEM_000153_இராமநாதபுரம்_திருஉத்திரகோசமங்கை-0024.jpg

cg102v001.mp4