MARC காட்சி

Back
பிட்டுக்கு மண் சுமந்த சிவனார்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பிட்டுக்கு மண் சுமந்த சிவனார்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a தந்தம்
500 : _ _ |a வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a மதுரையம்பதியில் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒன்றாகும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் இக்கதை இடம் பெற்றுள்ளது. பாண்டிய மன்னன் வரகுணன் ஆட்சி காலத்தில் ஒரு பொழுது ஓயாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. இறைவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே, உதிர்ந்த பிட்டை ஏற்றுக் கொள்வதாகக் கூறி மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். பிட்டை வாங்கி உண்ட பின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார். உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. இச்சிற்பத்தில் மரத்தினடியில் பிட்டு சுட்டு விற்கும் முதியவள் வந்தியிடம், தன் கையை நீட்டி கூலியாக பிட்டு கேட்கும் சிவபெருமான். சிவன் எளியராய், தலையில் மண் கூடையை வைத்துக் கொண்டு, இடது கையால் மண் வெட்டியை பிடித்துக் கொண்டு, இடது தோளில் சாய்த்தி, கோவண ஆடையோடு, நீள் செவியராய், இளம் வயதினராய் விளங்குகிறார். மரத்தினடியில் பிட்டு விற்பதற்காக அமர்ந்திருக்கும் முதியவள் வந்திக்கிழவியோ தன் அகன்ற பிட்டு சட்டியிலிருந்து உதிர்ந்த பிட்டை எடுக்கிறாள்.
653 : _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், 64 திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த பெருமான், திருவிளையாடற் புராணம், வந்தி, புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம்
905 : _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
914 : _ _ |a 12.00275101
915 : _ _ |a 79.06188179
995 : _ _ |a TVA_SCL_000536
barcode : TVA_SCL_000536
book category : தந்தச் சிற்பங்கள்
cover images TVA_SCL_000536_திருவரங்கம்_பிட்டுக்கு-மண்-சுமந்த-சிவனார்-001.jpg :
Primary File :

TVA_SCL_000536_திருவரங்கம்_பிட்டுக்கு-மண்-சுமந்த-சிவனார்-001.jpg