000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஜேஷ்டா தேவி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மூத்த தேவியான சேட்டை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. பண்டைய தமிழர்கள் போர் வெற்றிக்காக கொற்றவையையும், வணிக வளத்திற்காக அய்யனாரையும் வழிபட்டனர். வேளாண்மை வளத்திற்காக மூத்த தேவியை வழிபட்டு இருக்கலாம். ஏனெனில் கலப்பை, முறம், காளை உருவம் போன்றவை வேளாண்மையோடு தொடர்புடையவை. சேட்டையின் மகன் மாந்தன் வலதுபுறத்தில் நிற்கிறான். அவன் எருமைத் தலையை உடையவன். இடது புறத்தில் மாந்தி நிற்கிறாள். தேவியின் இரு காலருகே கணங்கள் இரண்டு தன் தலையில் தட்டு போன்ற ஒன்றை வைத்துள்ளது. இதன் மேல் தாங்கியாக சேட்டை தேவி தன் இரு கைகளை வைத்துள்ளாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி, ஆரம் துலங்க, கைகளில் வளைகள் விளங்க, மார்பில் முப்புரி நூல் அணிந்தவாறு அமர்ந்துள்ளாள். கால்களில் சதங்கைகள் காட்டப்பட்டுள்ளன. வலது மேற்புறம் காகக் கொடி காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a ஜேஷ்டா தேவி, சேட்டை, சேட்டை தேவி, ஜ்யேஷ்டா, மூத்த தேவி, மூதேவி, தூக்கக் கடவுள், பேரங்கியூர் திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், திருமூலநாதர் கோயில், விழுப்புரம், முதலாம் பராந்தகச் சோழன், முற்காலச் சோழர் கலைப்பாணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a திருமூலநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பேரங்கியூர் |d விழுப்புரம் |f திருவெண்ணெய்நல்லூர் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர் |
914 | : | _ _ |a 11.86065213 |
915 | : | _ _ |a 79.36661839 |
995 | : | _ _ |a TVA_SCL_000494 |
barcode | : | TVA_SCL_000494 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |