000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கணபதி |
300 | : | _ _ |a கணாதிபத்யம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சிவனாரைப் போன்று கரங்களில் மான், மழுவையேந்தியுள்ள கணபதி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்துள்ள கணபதியின் தலைக்கு மேலே குடை காட்டப்பட்டுள்ளது. குடைக்கு கீழே இருபுறமும் சாமரங்கள் காணப்படுகின்றன. இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி அமர்ந்துள்ள கணபதி, உடலை நேராகவும், தலையை பக்கவாட்டிலும் திருப்பியுள்ளார். நான்கு திருக்கரங்களில் மேலிரு கைகளில் மழுவையும், மானையும் பிடித்துள்ளார். வலது முன் கை வலத்தொடையில் இருத்தி, மோதகம் அல்லது கனி ஒன்றை உள்ளங்கையில் வைத்துள்ளார். இடது முன்கை இடது முழங்காலின் அருகே பற்றிய படி உள்ளது. துதிக்கையில் இருப்பது அமுத கலசம் அல்லது கனியாய் இருக்கலாம். பூரிம மகுடம் அணிந்துள்ள கணபதிக்கு தொய்யலுடன் கூடிய நெற்றிப்பட்டை அழகு சேர்க்கின்றது. முறச் செவியர் கழுத்தில் சவடியும், கைகளில் தோள் வளையான கேயூரமும், ஒற்றை முன் வளையும் அணிந்துள்ளார். பருத்த வயிற்றில் உதரபந்தமும், மார்பில் முரிநூலும் காட்டப்பட்டுள்ளன. சிவபெருமான் தன் கைகளில் பற்றியுள்ள அவரது கருவிகளான மான், மழுவை இச்சிற்பத்தில் விநாயகர் பிடித்துள்ளார். இதுவே இச்சிற்பத்தின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பாகும். |
653 | : | _ _ |a மான்-மழு ஏந்திய விநாயகர், பேரங்கியூர் திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், திருமூலநாதர் கோயில், விழுப்புரம், முதலாம் பராந்தகச் சோழன், முற்காலச் சோழர் கலைப்பாணி, மானேந்திய விநாயகர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கணபதி சிற்பம், கணபதி வடிவம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a திருமூலநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பேரங்கியூர் |d விழுப்புரம் |f திருவெண்ணெய்நல்லூர் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
914 | : | _ _ |a 11.86065213 |
915 | : | _ _ |a 79.36661839 |
995 | : | _ _ |a TVA_SCL_000491 |
barcode | : | TVA_SCL_000491 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |