MARC காட்சி

Back
கோவர்த்தனன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a கோவர்த்தனன்
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a மாமல்லபுரத்தில் கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a மழைக்கடவுளான இந்திரனுக்கு ஆயர்பாடி ஆயர்கள் ஆண்டு தோறும் பூசை செய்து வழிபட்டனர். ஏனெனில் கால்நடை வளர்ப்பு சமூகத்தைச் சேர்ந்த அம்மக்களின் வாழ்வாதாரமான ஆநிரைகளுக்கு தேவையான நீரை (மழையை) மழைக்கடவுளான இந்திரனே அருள முடியும் என்று நம்பினர். ஒருமுறை, அதற்குரிய ஏற்பாட்டை கிருஷ்ணன் தடுத்து அருகில் உள்ள மலைக்கு பூசை செய்ய வைத்தார். ஏனெனில் மழைக்கு மலையே காரணம் என்பது அவர் துணிபு. இதனால் கோபம் கொண்ட மழைக் கடவுளான இந்திரன், கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பொழியச் செய்தார். இடி மின்னலுடன் கூடிய தொடர் மழையைக் கண்டு பயந்த கோகுலத்து ஆயர்களையும் ஆவினங்களையும் காக்க கிருஷ்ணன், அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். இப்படி ஒரு வரையை (மலையை) தூக்கியதால் திருமால் வரையெடுத்தோன் என்று அழைக்கப்படுகிறார். இச்சிற்பத் தொகுதியில் மையமாக கோவர்த்தனன் மலையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துள்ளார். பலராமன் இடையர் ஒருவரின் தோளை அணைத்தபடி நிற்கிறார். இவர்களைச் சுற்றிலும் ஆநிரைகளும், ஆயர்களும் , ஆய்ச்சியர்களும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டவாறு உள்ளனர். இடையர் ஒருவர் பால் கறக்கிறார். மற்றொருவர் குழலூதுகிறார். அழும் குழந்தைக்கு குழலின் இசையை கேட்கப் பழக்கி சமாதானப்படுத்துகிறாள் ஒரு தாய். இடைச்சி ஒருவளோ கையில் உறிப்பானைகளை பிடித்துக் கொண்டு தலையில் சுருட்டிய பாயை சுமந்துள்ளார். ஆயர் கூட்டமும், ஆநிரையுமன்றி, சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளும் மலையின் அடியில் அமர்ந்துள்ளன. சிங்கங்களின் மேல் பல்லவர்களுக்கு தனிக் காதல் உண்டு போலும் இச்சிற்பத் தொகுதியிலும், அர்ச்சுன் தபசு சிற்பத் தொகுதியிலும் சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதியில் சிங்க உடலும் மனித முகமும் கொண்ட வடிவம் ஒன்று சிங்கங்களின் நடுவில் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்திற்கு மீசை காட்டப்பட்டுள்ளது. கொம்புகளும் உள்ளன. பல்லவச் சிற்பியின் கற்பனைத்திறம் இதுவெனக் கொள்ளலாம்.
653 : _ _ |a கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம்
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
914 : _ _ |a 12.626927
915 : _ _ |a 80.1927109
995 : _ _ |a TVA_SCL_000464
barcode : TVA_SCL_000464
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000464_மாமல்லபுரம்_கோவர்த்தனன்-001.jpg