| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a விஷ்ணு |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a தன் வாகனமான கருடனோடு அன்புருவாகி நிற்கும் விஷ்ணு |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a விஷ்ணு கருடனின் தோள் மீது கை வைத்து அணைத்தவாறு நிற்கிறார். தலைவனின் அணைப்பில் ஆனந்தம் கொண்டவராய் கருடன் பணிவுடன் உள்ளார். விஷ்ணு கிரீட மகுடராய், நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கலாம். வலது முன் கை கருடனுக்கு அபயம் அளிக்கிறது. இடது முன் கை கருடனின் தோளை அணைத்துள்ளது. கணுக்கால் வரை நீண்ட ஆடையணிந்துள்ள விஷ்ணு திரிபங்க நிலையில் நின்றுள்ளார். திரிபங்க நிலை என்பது உடலை மூன்று நிலைகளில் அமைப்பதாகும். நீள் செவிகளில் மகரகுண்டலங்கள் விளங்க, கழுத்தில் சரப்பளி அணி செய்ய, மார்பில் முப்புரிநூல், உரஸ் சூத்திரம் துலங்க, இடைக்கட்டின் கடிபந்தம் இரண்டு மடிப்புகளாக முன் விழ எழிலாக நிற்கிறார். கருடன் தன் இடது முழங்காலின் மீது இடது கையை ஊன்றி சாய்ந்து நிற்கிறார். விஷ்ணுவின் மார்பு வரையே கருடனின் உருவம் அமைந்துள்ளது. அழகிய தலைக்கோலமும், கைகளில் தோள் வளை, முன் வளை ஆகியன கொண்டு விளங்குகின்றார். |
| 653 | : | _ _ |a விஷ்ணு, கருட சேவை, மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம், வைணவச் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
| 905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
| 914 | : | _ _ |a 12.626927 |
| 915 | : | _ _ |a 80.1927109 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000440 |
| barcode | : | TVA_SCL_000440 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |