000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a மகிஷாசுரமர்த்தினி |
300 |
: |
_ _ |a சாக்தம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a எருமைத் தலையனை வென்று அவன் தலை மேல் தன் வீரக்கழல்கள் மிளிர நின்றிருக்கும் அன்னை மகிஷாசுரமர்த்தினி |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a எருமைத்தலை அரக்கனை வென்ற பிறகு அன்னை கொற்றமங்கையாக சமபாதத்தில் எருமைத்தலையின் மேல் நிற்கும் காட்சி. தலைக்கு மேல் கொற்றக் குடையும், தலைக்குப் பின்னால் திருவாச்சி போன்ற நீள்வட்ட எரி சுடர் அமைப்பும் காட்டப்பட்டுள்ளன. மேலே இருபுறமும் சூரிய சந்திர்கள் பறந்தபடி ஒரு கையில் மலரைப் பிடித்தபடியும், மற்றொரு கையால் போற்றி முத்திரை காட்டியபடியும் உள்ளனர். நான்கு திருக்கைகளுள், மேலிரு கைகளில் சங்கு, சக்கரமும், வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை ஏந்தல் முத்திரையும் கொண்டுள்ளார். பத்ரபூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் தலையணியாகக் கொண்டு, நெற்றியில் நெற்றிப்பட்டையும், கண்ணி மாலையும் சூடியுள்ளார். காதுகளில் செவிப்பூக்கள் மற்றும் தொள்ளைக் காதுகளில் குண்டலங்களும் விளங்குகின்றன. தோள்களில் வாகுமாலை அணி செய்கின்றது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம் விளங்க, கொங்கைகளை மறைத்தவாறு குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது. மார்பில் சன்னவீரம் குறுக்காக செல்கிறது. கைகளில தோள்மாலை, தோள்வளை, முன்வளைகள் அணிந்துள்ள தேவியின் விரல்களில் நடுவிரல் தவிர பிற விரல்களில் விரலணி வளையங்களாக உள்ளன. சிம்மயாளி முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை மற்றும் தாரகைச் சும்மை இடையில் விளங்க இடைக்கட்டாகிய கடி சூத்திரம் இரு தொடையின் மேல் வளைந்துள்ளது. தொடையில் அணியாக குறங்கு செறி விளங்குகின்றது. தொடையில் அரையாடை அணிந்துள்ள கொற்ற தேவி கால்களில் ஐந்து எண்ணிக்கையுள்ள பாடகம் பூண்டுள்ளார். தேவியின் இருபுறமும் இரண்டு பணிப் பெண்கள் நின்றுள்ளனர். இவர்கள் கையில் பிடித்த தண்டாயுதத்தை தோளில் சாத்தியுள்ளனர். மற்றொரு கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்துள்ளனர். இருவரும் முழு நீள ஆடை, மார்பில் சன்னவீரம், கழுத்தணி காதணி, கையணி இவைகளை தம் தலைவியைப் போலவே கொண்டுள்ளனர். இருவருக்கும் தலைக்கோலம் குந்தளமாக அமைந்துள்ளது. இருபுறமும் உள்ள பகுப்புக் கோட்டங்களில் முனிவர்களும், அரசன் அரசியாரும், குருமார்களும் வணங்கிய நிலையிலும், போற்றிய நிலையிலும், பணிந்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர். |
653 |
: |
_ _ |a மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை, கொற்றவை, விஷ்ணு துர்க்கை, தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 |
: |
_ _ |a 10.7831901 |
915 |
: |
_ _ |a 79.13123578 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000383 |
barcode |
: |
TVA_SCL_000383 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000383_தஞ்சை-பெருவுடையார்-கோயில்_மகிஷாசுரமர்த்தினி-001.jpg
|