000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திருஞானசம்பந்தர் (ஆளுடையப் பிள்ளையார்) |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a 63 நாயன்மார்களுள் ஒருவரும், தேவார மூவருள் முதல்வருமாகிய திருஞான சம்பந்தர் (ஆளுடைய பிள்ளை) |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்ற போது, அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுதது. அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார். குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார். இச்சிற்பக் காட்சியில் சம்பந்தர் சிறு பாலகனாய் உள்ளார். சம்பந்தரின் வலது புறம் அம்மையப்பர் இடப வாகனத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றனர். ஆளுடைய பிள்ளையின் இடது புறம் அவர் தந்தை அந்தணர்க்குரிய தோற்றத்துடன் ஒரு சிறு கோலை கையில் வைத்து ஓங்கியவாறு (குழந்தையை மிரட்டும் பாணியில்) நின்ற படி சம்பந்தரை விசாரிக்கிறார். |
653 | : | _ _ |a திருஞான சம்பந்தர், ஆளுடையப் பிள்ளை, புகலியர் கோன், ஆளுடைய நாயனார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000326 |
barcode | : | TVA_SCL_000326 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |