MARC காட்சி

Back
நடுகல் தலைப்பலி வீரன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a நடுகல் தலைப்பலி வீரன்
300 : _ _ |a நடுகல்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தலையறுத்துத் தரும் வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்திருக்கிறது. தன் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பலியிடும் வழக்கம் அரசுருவாக்கத்திற்குப் பின் அரசனின் வெற்றிக்கானதாக மாறியிருக்கிறது. அக்காலத்துப் பூதத்திற்கு பலிகொடுப்பதாகவும், அரசனுக்கு உற்றதை ஒழிக்க வேண்டுமென முறையீட்டு தம்மைத் தாமே பலியிட்ட செய்தியை அறியமுடிகிறது. இவ்வாறு பலிகொடுத்ததற்காக நிலம் அழிக்கப்பட்டதையும், பல்லவர்கால நடுகல் குறிக்கிறது. இவை போர் நிமித்தமாக அரசனுக்காக நிகழ்த்தப்பட்ட உயிர்பலிகள் எனினும், போர்த் தெய்வமேனும் கொற்றவையே இப்பலிக்குரியவளாக பார்க்கப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. தன்னைத் தானே பலியிட்டு தன் குலத்திற்கு, தலைவனுக்கு வெற்றி வேண்டுவது சுவிப்பலி, ஆத்மபலி, நரபலி, களபலி தலைபலி, சிடிதலை (கன்னடம்) மிடிதலெ, கண்டதலெ (ஆந்திரம்) சாவாரப்பலி, தூங்குதலை கொடுத்தல், நவகண்டம் எனப் பல சொற்களால் அறியப்படுகிறது. களபலி என்பது போர்க்களத்தில் பூசல் தொடங்கும் முன் வெற்றி வேண்டி வெற்றி தெய்வமான கொற்றவைக்குக் கொடுக்கும் பலியாகும். இச்சிற்பத்தில் இடம் பெற்றுள்ள தலைப்பலி நடுகல் வீரன் தன் இடது கையால் உச்சிக் கொண்டையை பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள கத்தியால் கழுத்தை அரிகிறான். நெற்றியில் கண்ணி மாலை சூடியுள்ளான். கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம் எனப்படும் தோள்வளை, முன் வளைகள், இடையில் இடைக்கட்டுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை ஆகியவற்றை அணிந்துள்ளான். மிகவும் துன்பந்தரும் இச்செயலை தன் மனதிடத்தால் செய்யும் இவ்வீரன் செயற்கரிய செயல் செய்ய விழைந்த தன்மையை இச்சிற்பம் நன்கு விளக்குகிறது.
653 : _ _ |a தலைப்பலி, நடுகல், நடுகல் வீரன், கிருஷ்ணகிரி நடுகற்கள், பெண்ணேசுவர மடம், வீரக்கல், நினைவுக் கல், போர்வீரன், நவகண்டம்
710 : _ _ |a முனைவர் கோ. சசிகலா
752 : _ _ |a பெண்ணேசுவர மடம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பெண்ணேசுவர மடம் |d கிருஷ்ணகிரி |f பையூர் பற்று
905 : _ _ |a கி.பி.12-13ஆம் நூற்றாண்டு/
914 : _ _ |a 12.39301965
915 : _ _ |a 78.24379742
995 : _ _ |a TVA_SCL_000294
barcode : TVA_SCL_000294
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000294_பெண்ணேசுவர-மடம்_நடுகல்-தலைப்பலி-வீரன்-001.jpg